என்றாள் கீதா.
"சாரி, சாரி கீதாக்கா... ஹாப்பி வெட்டிங் அனிவேர்சரி...." என்று சொன்னதுடன், கையிலிருந்த பரிசையும் கீதாவிடம் கொடுத்தாள் இந்து.
"தேங்க்ஸ் இந்து..." என சொல்லி தோழியின் பரிசை கையில் வாங்கிக் கொண்டாள் கீதா!
"என்னக்கா நீங்க இங்கே இருக்கீங்க, ராஜீவ் அங்கே இருக்கார்? இந்த் ஃபங்க்ஷனே உங்க இரண்டுப் பேருக்காக தானே???"
"அதுவா... சஞ்சீவ் ஏதோ ஒரு விஐபி'க்காக வெயிட் பண்ணிட்டு இருக்கார்... அவங்க வந்தப்புறம் தான் கேக் கட் பண்ணனும்னு கட் அன்ட் ரைட்டா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார்..." என்று மற்றவர்களுக்கு தெரியாது கண் சிமிட்டி சொன்னாள் கீதா.
கீதா சொன்னதை புரிந்துக் கொண்டதற்கு அடையாளமாக இந்துவின் முகம் மலர்ந்தது. ஆனால் கீதாவின் பக்கத்தில் இருந்த கண்மணியும் அவளை கேலியாக பார்க்கவும்... இந்துவிற்கு என்னவோ போல இருந்தது...
அவளின் முக மாற்றத்தை கவனித்த கண்மணி, "கவலைப் படாதீங்க இந்து அக்கா... எனக்கும் இப்போ எல்லாம் தெரியும்..." என்றாள் தணிந்தக் குரலில்!
கண்மணியும் முகமும் அவள் சொன்னது உண்மை என்பதை உணர்த்தவும், இந்துவால் அப்போது தான இயல்பாக மூச்சே விட முடிந்தது!
சிறிது நேரத்தில் அன்றைய விழாவும் திட்டமிட்டதுப் போல தொடங்கியது. ராஜீவும் கீதாவும், கேக் வெட்டி தங்களின் இரண்டாவது திருமண நாளை கொண்டாடினார்கள். விழாவிற்கு வந்திருந்தவர்கள் அவர்களை பரிசு மழையில் நனைத்தார்கள்!!!
கீதா, ராஜீவ் இருந்த சென்டர்-ஸ்டேஜிற்கு சற்று தள்ளி அமர்ந்து வீணா, இந்து, கண்மணி மூவரும் கதைப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது பெயருக்கு ஏதாவது சாக்கு சொல்லிக் கொண்டு சஞ்சீவும் அவர்களிடம் வந்து பேசிவிட்டு சென்றான்!