எல்லாமே இயல்பா நடந்தது”
”பிரமாதமா பாடினீங்க, வெறும் நாலு வரின்னாலும் அற்புதமா இருந்தது, ஆமா மீதி பாட்டை எப்ப பாடி காட்டுவீங்க”
”அதுக்கென்ன இப்பவே பாடறேன் கேட்கறியா”
”கண்டிப்பா” என சொல்ல அவனும் பாட தயாரானான் அந்நேரம் ஜானகியும் பலகார தட்டுடன் மூர்த்தியிடம் வந்தாள்.
முத்து மணிதிறல் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ
செக்கச் சிவந்த இதழாலே
சிந்தும் புன்னகை மந்திரமோ
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ
சலவைக் கல்லே சிலையாக
தங்க பாலம் கையாக
மலர்களிரன்டும் விழியாக..
மயங்க வைத்தாளோ
என பாடிவைக்க அதைக்கேட்டு உற்சாகமாக கைகளை தட்டினாள் மஹதி
”சூப்பரா பாடினீங்க” என்றாள், அவர்களின் மகிழ்ச்சியை சகிக்க இயலாமல் கடுப்பான மூர்த்தியோ தன்னிடம் வந்த ஜானகியை வெறுப்பாக பார்த்தான், அவனின் மனநிலைமையை அறியாத ஜானகியோ