ஜானகிக்கு மனம் கனத்துவிட்டது
ஏன் இவ்வாறு நடந்துக் கொள்கிறான் என புரியாமல் திகைத்து மஹதியைப் பார்க்க மஹதியோ அழாதே என்பது போல் சைகை செய்து வேங்கையனிடம்
”உங்களுக்கு பலகாரம் சாப்பிட பிடிக்குமா“ என கேட்க அவனோ
”ஓ பிடிக்குமே செய்து கொடுத்தா சாப்பிடுவேன்”
”என்னென்ன பிடிக்கும்னு சொல்லுங்க நான் செஞ்சி கொண்டு வரேன்”
”உனக்கெதுக்கு வீண்சிரமம், அம்மா இருக்காங்க அவங்ககிட்ட சொன்னா அவங்க செய்து தரப்போறாங்க, நீ ஏன் அடுப்படியில வேகனும்”
”மனசுக்கு பிடிச்சவங்களுக்காக கொஞ்ச கஷ்டத்தை கூடவா நான் தாங்க மாட்டேன்”
“அப்படியில்லை வந்த அன்னிக்கே எதுக்கு, கொஞ்ச நாள் போகட்டும் சரி உனக்கு என்ன பலகாரம் வேணும்னு சொல்லு செய்ய சொல்றேன்“
”நான் சொல்றதை நீங்களே செய்து கொண்டு வாங்க நான் சாப்பிடறேன்”
”நானா சமையலா”
”ஏன் எனக்காக செய்ய மாட்டீங்களா”
”ம்ம் சரி முயற்சி செய்றேன், அம்மாகிட்ட கேட்டு கத்துக்கிறேன் சரி உனக்கு என்ன பலகாரம் வேணும் சொல்லு”
”என்ன சொல்லலாம்”
”இங்க பாரு எனக்கு சமைச்சி எல்லாம் அனுபவம் இல்லை அதனால சுலபமா செய்ற