பலகாரமா சொல்லு”
”சரி கேசரி கொண்டு வாங்க”
”சரி நான் போய் கத்துக்கிட்டு செஞ்சிக் கொண்டு வரேன்” என சொல்லிவிட்டு உடனே வேங்கையன் சென்றுவிட ஜானகி அசந்துவிட்டாள்.
”என்ன இவன் இப்படி மாறிட்டான், எதுக்காகவும் அடுப்படிக்கு போகாதவன் இன்னிக்கு மஹதிக்காக போறானே, என்ன நடக்குதுன்னு போய் பார்க்கலாம்” என நினைத்து அவன் பின்னாலே சென்றாள்.
மஹதிக்கும் செல்ல வேண்டும் என ஆசைதான் ஆனால் அதை கெடுத்தான் மூர்த்தி
”என் பேரு மூர்த்தி” என பேச்சு கொடுக்க மஹதியோ மென்மையாக சிரித்துவிட்டு
”என் பேரு மஹதி”
”ஓ நல்லா தெரியுமே”
”எப்படி”
”எனக்காக பார்த்து வைச்ச பொண்ணாச்சே நீங்க”
”அப்படியா எனக்குத் தெரியாதே சாரி”
”பரவாயில்லை இருக்கட்டும் ஆமா எதுக்காக இங்க வந்தீங்க”
”புரியலை“
”வேங்கையன்லாம் ஒரு ஆளா உங்களுக்கு ஏத்தவன் அவன் இல்லைங்க”