”அப்படியா”
”ஆமாம் நல்ல படிச்ச அரசாங்க வேலையில இருக்கறவனை பார்க்கலாமே”
”ஏற்கனவே அப்படி ஒருத்தனை பார்த்தோம் ஆனா அவன் கெட்டவன் அயோக்கியன்னு யாரோ தகவல் சொன்னாங்க, அதுல அந்த வரனை விட்டுட்டு இந்த இடத்தை பார்த்தோம்“
”அய்யோ அது யாரோ தப்பான தகவல் சொன்னது, உண்மையிலயே உங்களுக்கு பார்த்த வரன் நல்லவன்ங்க“
”அது எப்படி உங்களுக்கு தெரியும்“
”ஏன்னா அந்த வரனே நான்தானே”
”என்னது நீங்களா”
”ஆமாம் யாரோ என்னைப் பத்தி தப்புத்தப்பா சொல்லியிருக்காங்க, உண்மையில நான் ரொம்ப டீசன்டானவன், நல்லா படிச்சிருக்கேன், பேங்க் உத்தியோகம், பக்காவா செட்டில் ஆயிட்டேன், எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லை, எனக்கு அப்பா அம்மா தவிர அண்ணன் தம்பி அக்கா தங்கைன்னு கூட பிறந்தவங்க யாரும் இல்லை”
”ஓ இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க”
”இல்லை என்னை பத்தி உங்க வீட்ல சொல்வீங்கன்னுதான்”
”வேணாமே அதான் வேங்கையன் இருக்காரே”
”அவன்லாம் மனுஷனே கிடையாது படிக்காத பட்டிக்காடு முரடன் காட்டான் அவனுக்கு அமைதியா பேச வராது”