தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
37. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இரவு உணவை முடித்ததும், அர்ச்சனாவும், இந்துவும், இந்துவின் அறையில் இருந்த பால்கனியில் வந்து அமர்ந்தார்கள். அர்ச்சனா பேச விரும்பியதை உடனே சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். இந்து அம்மாவை பார்ப்பதும், வெளியே மின்விளக்கில் மின்னிய சாலையையும், தோட்டத்தையும் பார்ப்பதுமாக இருந்தாள்... அவளுக்கு அர்ச்சனா சொல்ல விரும்புவதை கேட்க பெரிய அளவில் ஆர்வம் இருக்கவில்லை... எனவே சில நிமிடங்கள் அமைதியிலே கரைந்துப் போகவும், பொறுமையை இழந்தவளாக,
"ஏதோ சொல்லனும்னு சொன்னீங்க அம்மா...." என்றாள்!
இந்துவின் பேச்சினால் யோசனையில் இருந்து விடுப்பட்ட அர்ச்சனா, மகளைப் பார்த்து புன்னகை புரிந்தாள்...
"உனக்கு பொறுமை கொஞ்சம் கூட இல்லடா இந்து... இந்த விஷயத்தில நீ கொஞ்சம் மாறி ஆகனும்... சரி, அதை அப்புறம் பார்ப்போம்... நான் இப்போ சொல்றதை நடுவுல கேள்வி எதுவும் கேட்காம அமைதியா கேளு... இந்த விஷயத்தை உங்க அப்பா உன் கிட்ட சொல்ல கூடாதுன்னு நினைச்சிருந்தார்... அதைப் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்... உனக்கு கொஞ்சமே கொஞ்சமா முன் கோபம் இருந்தாலும், நீ ரொம்ப நல்லவன்னு எனக்கு தெரியும்... அதனால அவசரப் படாமல் முழுசா கேளு..."
அர்ச்சனா சொன்ன 'முன் கோபத்தின்' காரணமாக கோபப் பட்டாலும், அர்ச்சனா கொடுத்த நீண்ட முன்னுரையின் காரணமாக, இந்துவிற்கும் என்ன என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் எழுந்தது... அதனால் அம்மா சொன்னதைப் பற்றி கேள்விக் கேட்டுக் கொண்டிருக்காமல், அமைதியாக சரி என தலை ஆட்டினாள்!
அர்ச்சனா மகள் பக்கம் இருந்து பார்வையை திருப்பி தொலைவில் தெரிந்த மரத்தைப் பார்த்தாள்...
"இது பல வருஷம் முன்னாடி நடந்த விஷயம் இந்து... உனக்கே தெரியும், என் சைட் ஃபேமிலி பிஸ்னஸ்க்கு பேர் போனது... நான் என் வீட்டுல ஒரே செல்லப் பொண்ணு... எங்க அப்பா அம்மா மட்டும் இல்ல, அண்ணா அண்ணி எல்லோருமே எனக்குப் பிடிச்ச மாதிரி தான்