(Reading time: 27 - 53 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 14 - சசிரேகா

மறுநாள் பொழுது விடிந்தது

  

காவேரியும் சரி கொம்பனும் சரி ஏதும் நடவாதது போலவே நடந்துக் கொண்டார்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை, அப்படி பார்த்துக் கொள்ளும் தருணம் வந்தால் கூட இருவரும் தலைகுனிந்து நிலத்தை பார்த்தபடி சென்றார்களே தவிர அவர்களின் நிழல் கூட ஒன்று சேரவில்லை, அதுவும் முறைத்துக் கொண்டுச் சென்றது, இவர்களின் நடவடிக்கையைக்கண்ட சண்முகம் கவலைக் கொள்ள அவரை கணக்குப்பிள்ளை ஆறுதல்படுத்தினான்

  

”இவங்க வாழ்க்கை என்ன இப்ப ரொம்பவே மோசமா போயிக்கிட்டு இருக்கே, எனக்கு ரொம்ப கவலையா இருக்கு”

  

”நாம கவலைப்பட்டு என்ன செய்றது அவங்க மனசு தானா மாறினாதான் உண்டு”

  

”என் பொண்ணை நினைச்சா கவலையா இருக்கு அவள் ஏன்தான் இப்படி நடந்துக்கறாளோ”

  

”காவேரி மேல தப்பு சொல்லாதீங்க பாவம் அவள் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா“

  

”ஊர்க்காரங்க செய்த தப்புக்காக மாப்பிள்ளையை பழிவாங்கறா இதனால அவளும் நிம்மதியாயில்லையே”

  

”புரியுது இதுக்காக ஊர்க்காரங்களையா பழிவாங்க முடியும் வேணா ஒண்ணு செய்யலாம்”

  

”என்ன வழி சொல்லுப்பா செய்யறேன்”

  

”உங்க பொண்ணு கல்யாணத்தன்னிக்கு யார் யார் எல்லாம் வந்து கல்யாணத்தை நிப்பாட்டினாங்களோ அவங்களை எல்லாம் கூட்டிட்டு வந்து மன்னிப்பு கேட்க வைச்சா வேணா காவேரி மனசு மாறும்னு நினைக்கிறேன்” என சொல்ல அவரோ குழம்பினார்

  

”7 முறை கல்யாணம் நடத்தினேன் 7 முறையும் அது தடைபட்டது, அப்பலாம் யார்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.