”நடிப்பில்லை நிஜம்தான் ஆக நீ பயப்படற சூப்பரு” என சொல்ல கணக்குபிள்ளை கைதட்டியபடியே வந்து நின்றான், அவனது கைதட்டலைக்கண்டு காவேரிக்கு கோபமே எழுந்தது அவனை முறைக்க
”என்ன கொம்பா உன் முறைப்பொண்ணு என்னைப் பார்த்து முறைக்குது என்ன விசயம்”
”உன் தங்கச்சிகிட்ட நீயே கேட்டு தெரிஞ்சிக்க”
”அதானே என் பாசமிகு தங்கையே, எதுக்கு இந்த அண்ணனை பார்த்து முறைக்கற என்ன விசயம்” என கேட்க அவளோ
”நீங்களும் எனக்கு துரோகம் இழைச்சிட்டீங்கள்ல”
”நானா என்னம்மா சொல்ற”
”கொம்பன் என்னை பழிவாங்கறதுக்காகதான் மன்னிப்பு கேட்டு என்னை தந்திரமா இங்க கூட்டிட்டு வந்திருக்காரு அது உங்களுக்கும் தெரியும்தானே”
”ஓ தெரியுமே”
”தெரிஞ்சுமா எனக்கு அநியாயம் செய்தீங்க”
”அம்மாடி நாங்க பேசிக்கிட்டு இருந்ததை நீ ஒட்டுக்கேட்டதை நான் பார்த்தேன், எப்படியும் நீ ஏதாவது சொதப்புவன்னு எதிர்பார்த்து உடனே திட்டத்தை மாத்தினேன், கொம்பன்கிட்ட சொன்னேன் எதுவாயிருந்தாலும் நம்ம வீட்ல வைச்சிக்கலாம்னு, அவனும் இத்தனை நாள் நீ பட்ட கஷ்டத்துக்கு ஒரு மன்னிப்புதானே கேட்டுட்டுப் போறேன்னு சொன்னான், உன் ஆசைப்படி அவன் ஊர்க்காரங்க முன்னாடி மன்னிப்பு கேட்டுட்டான், அதை நம்பி நீயும் அவனை ஏத்துக்கிட்டு இங்க வாழ வந்துட்ட, இனி நீயாச்சு கொம்பனாச்சு அய்யோ பாவம் இந்த பொண்ணு கொம்பனை பத்தி தெரியாம வந்துடுச்சி” என சொல்லியவன் கொம்பனிடம்