(Reading time: 27 - 53 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

இருந்தார்கள், எதற்காக இப்படி வரவழைத்தார்கள் என தெரியாமல் அவரவர்கள் கண்டபடி கதைகட்டி பேசினார்கள், சண்முகமும் காவேரியுடன் அவ்விடம் வந்து சேர்ந்தார், அவர்கள் வந்ததும் கொம்பனோ கணக்குபிள்ளையிடம்

  

”என்னடா எல்லாரும் வந்துட்டாங்களா”

  

”எல்லாரும் வந்துட்டாங்க நண்பா”

  

”அப்ப ஆரம்பிக்கலாமா”

  

”நல்லா  யோசிச்சிதான் இந்த முடிவுக்கு வந்தியா”

  

”ஆமாம்”

  

”இதனால உன்னோட மானம் போகுமே“

  

“ஏற்கனவே போய்கிட்டுதானே இருக்கு போனா போகுது”

  

”நண்பா”

  

”மானம் போனா ஒரு ஆம்பளைக்கு எவ்ளோ கஷ்டமாயிருக்கும் அதே போலதானே ஒரு பொண்ணுக்கும் நான் பார்த்துக்கிறேன் நீ இரு” என சொல்ல அவனும் அமைதியாக ஒதுங்கி நின்றான்.

  

கொம்பன் ஊர்மக்களை ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு காவேரியைப் பார்த்து தன் அருகில் வருமாறு அழைக்க அவளோ பொம்மை போல நடந்து சென்று நின்றாள்

  

”என்னை மதிச்சி இங்க வந்திருக்கற எல்லாருக்கும் இந்த கொம்பனோட வணக்கம், கூடவே நன்றியும் சொல்லிக்கிறேன், ஏன்னா நீங்க எல்லாரும் எனக்கு செஞ்சது அப்படி, உங்களுக்கு ஒண்ணுன்னா உடனே உதவி செய்ய வர்றவன்தான் இந்த கொம்பன், ஆனா இப்ப நான் செய்த உதவியால பாவம் இங்க ஒரு பொண்ணுக்கு பல கஷ்டங்கள் வந்திடுச்சி, என் மேல

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.