”ஒண்ணுமில்லை”
”அட சொல்லு உனக்கிருக்கற ஒரே யோசனை காவேரிதானே”
”ஆமாம்” என்றான் அலுப்புடன்
”அதுக்கு ஒரு வழியிருக்கு”
”வழியா என்னவழி” என ஆர்வமாக கேட்டான் கொம்பன்
”சொல்றேன் ஆனா அந்த வழியை உன்னாலதான் செய்ய முடியும் ஆனா நீ செய்வியா மாட்டியான்னு தெரியலையே”
”எதுவாயிருந்தாலும் சொல்லுடா செய்றேன், இப்படியே எத்தனை நாள்தான் குடும்பத்தை ஓட்டறது கஷ்டமாயிருக்கு, என்னை நினைச்சி எங்க அப்பா அம்மாவும் வேதனைப்படறாங்க, இங்க காவேரியும் ஒண்ணும் சந்தோஷமா இல்லையே இப்படி ஏனோதானோன்னு வாழறது ஒரு வாழ்க்கையா சொல்லு”
”அதுக்குதான் நான் ஒரு வழியோட வந்திருக்கேன், நீ மட்டும் அதை செய்தன்னு வையேன் 100 சதவீதம் காவேரி உன்னை ஏத்துக்குவா என்னை நம்பு” என சொல்ல கொம்பனின் முகம் பிரகாசமானது
”நிஜமாவா”
”உண்மைதான்”
”சரி சொல்லு என்ன விசயம்”
”காவேரிகிட்ட நீ மன்னிப்பு கேட்கனும்”