”என்னை மன்னிச்சிடுங்க என்னாலதானே நீங்க ரொம்ப கஷ்டப்பட்டீங்க”
”அப்படியெல்லாம் இல்லைம்மா, இப்பதான் எல்லாமே சரியாயிடுச்சே இனிமேலயாவது என் மகனை ஏத்துக்கம்மா” என கெஞ்ச அவளும் சரியென தலையாட்டி கொம்பனைப் பார்த்து
”உங்களை நான் ஏத்துக்கறேன் மனபூர்வமா என் கணவரா ஏத்துக்கறேன்” என ஊரறிய சொல்ல அதைக்கேட்டு மகிழ்ந்தான் கொம்பன்.
ஊர்க்காரர்களும் மெல்ல கலைந்துச் சென்றார்கள், காவேரியும் தன் வீட்டிற்குச் செல்லாமல் கொம்பனின் தாயாருடன் அவனது வீட்டிற்குச் சென்றாள்.
எப்படியோ தன் மகளின் வாழ்க்கை நலமாகிவிட்ட மகிழ்ச்சியில் திளைத்தார் சண்முகம்.
முதல்முறையாக கொம்பனின் வீட்டிற்கு மருமகளாக வந்து நின்ற காவேரிக்கு அவனது தாயாரே ஆரத்தி எடுத்து வரவேற்றார்.
வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைக்கும் தருணம் பக்கத்தில் இருந்த கொம்பனோ அவளுக்கு மட்டும் கேட்கும்படி
”வாடி வா நேத்துவரை என்ன ஆட்டம் போட்ட, இனிமேல நீ என்ன செய்வன்னு பார்க்கிறேன்” என சொல்ல அவளுக்கு ஒருமாதிரியாகிவிட்டது, அதிர்ச்சியுடன் அவனைபார்க்க அவனோ சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைய அவளோ கவலையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.
வந்ததும் வராததுமாக கொம்பன் காவேரியிடம்
”வாம்மா வா இதுதான் என் வீடு உன்னோட புகுந்த வீடு, இங்க நீ மருமகளா எனக்கு மனைவியா வாழ்க்கையை ஓட்டனும் புரியுதா” என நக்கலாகச் சொல்ல அவளோ