மகன் சொன்ன பதிலை மனதுக்குள் அலசி ஆராய்ந்தாள் ராஜம்... இது அவள் எதிர்பார்த்த பதில் இல்லை... ஆனாலும், முழு விபரத்தையும் சொல்லாமல் இருப்பது சரி இல்லை என்ற முடிவுக்கு வந்தாள்...!!!
“இவ ஒரு விடோ விக்கி...”
“வாட்?” அதிர்ந்துப் போய் ராஜமை பார்த்தான் விக்ராந்த்.
அதை எதிர்பார்த்ததுப் போல ராஜம் மகனின் பார்வையை எதிர்கொண்டாள்!
அம்மாவை சில நொடிகள் பார்த்த விக்கிராந்த், மீண்டும் ஃபோட்டோவைப் பார்த்தான்... ஆனால் ஒன்றும் சொல்லாமல் நின்றான்...
"என்ன விக்கி அமைதியா இருக்க?”
ராஜம் கேட்ட கேள்விக்கு உடனடியாக பதில் சொல்லாமல், ஒன்றிரண்டு வினாடிகள் தயங்கிய விக்ராந்த்... மெல்ல, யோசித்துப் பேசினான்...
“சாரிம்மா... இதெல்லாம் எனக்கு சரியா வராது... வேண்டாமே...!”
விக்ராந்த் இப்படி விபரங்கள் எதுவுமே கேட்காமல், நேரடியாக மறுப்பான் என்று ராஜம் நினைத்திருக்கவில்லை! அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது!!!
“ஏன்டா? அவ விதவைன்னு நான் சொன்னதாலேயா?”
“அப்படின்னு இல்லை அம்மா... எனக்கு என் வருங்கால மனைவி பற்றி சில கனவுகள், எதிர்பார்ப்புகள் இருக்கு... இதெல்லாம் சரியா வராது... வேண்டாமே...”
“யோசிச்சு முடிவு எடேன் விக்கி...?”