தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
41. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
முடிவு செய்தப் பிறகு பின் வாங்கும் பழக்கம் இந்துவிற்கு எப்போதுமே இல்லை என்பதால், மறுநாள் காலையிலேயே சஞ்சீவை அவன் மொபைலில் அழைத்தாள்.
"ஹலோ இந்து... என்ன, காலையிலேயே என் குரல் கேட்காமல் இருக்க முடியலையா?"
சஞ்சீவின் குரல் கேட்ட உடனே அவளினுள் எழுந்த அந்த புளங்காகிதத்தை, சிலிர்ப்பை ஒரு வினாடி கண் மூடி ரசித்தாள் இந்து! சஞ்சீவின் குரலை எத்தனை முறை கேட்டாலும், அலுக்காமல், அதே இனிய உணர்வு அவளுக்குள் ஏற்படுவதன் அதிசயம் தான் அவளுக்கு புரியவில்லை!
"சஞ்சீவ், இன்னைக்கு ஈவ்னிங் நீங்க பிஸியா?"
"ம்ம்ம்ம்... ஒரு க்ரிட்டிகல் மீட்டிங் இருக்கு ஏழு மணி வரைக்கும்... எதுக்கு கேட்குற, ஏதாவது முக்கியமான விஷயமா???" என்றான் சஞ்சீவ் கொஞ்சம் தயக்கத்துடன்.
சஞ்சீவின் பதிலில் இந்துவிற்கு ஏமாற்றமாக இருந்தது. இது வரை எப்போதுமே சஞ்சீவ் அவள் ஒன்றுக் கேட்டு பிஸி என்றோ, வேறு வேலை இருக்கிறது என்றோ சொன்னதே இல்லை... இது என்ன இது இன்று மட்டும்...
இந்த எண்ணம் அவளுக்குள் ஓடும் போதே அவளின் மனமே அவளை திட்டவும் செய்தது... சஞ்சீவிற்கு வேலை இல்லையா என்ன? க்ரிட்டிகல் மீட்டிங் என்று வேறு சொல்கிறான்... இப்போதும் கூட அவள் முக்கியமான விஷயம் என்று சொன்னால் அந்த மீட்டிங்கை மறந்து விட்டு அவளுக்காக கட்டாயம் வருவான் தான்... ஆனால் அவனை அப்படி தொல்லை செய்வது சரி இல்லை...
மின்னலாய் மனதில் ஓடிய எண்ணங்களை மறைத்து,
"முக்கியமான விஷயம் தான் சஞ்சீவ்... ஆனால், உங்க மீட்டிங் முடிச்ச அப்புறம் பேசினால் போதும்... ஈவ்னிங் ஏழரை மணி மாதிரி நீங்க அண்ணா நகருக்கு வர முடியுமா?" எனக் கேட்டாள்...