தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
42. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கண்மணி ஒரே ஒரு வினாடி தயங்கினாள்! அடுத்த நொடியே,
"இதில நான் சொல்ல என்ன இருக்கு அத்தை... கல்யாண பேச்சு பெரியவங்களுக்குள்ள இருந்தது... ஆனால், சஞ்சீவ் அத்தானுக்கு பிடிக்கலை... அதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும்," என்றாள் தெளிவாக!
"உனக்கு அதுல வருத்தம் இல்லையா கண்மணி???" காஞ்சனாவின் கண்கள் ஊடுருவுவதுப் போல கண்மணியையே பார்த்துக் கொண்டு இருந்தன!
"எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை அத்தை... ஒரு விதத்தில இந்த விஷயம் தெளிவானதுல சந்தோஷம் தான்... சென்னைக்கு கிளம்பி வரும் போது ஒரே குழப்பமா இருந்தது... இப்போ மனசு தெளிவா இருக்கு... இப்போதைக்கு மேலே படிக்கலாம்னு இருக்கேன்.. கீதா அக்காவை அவங்க ஃப்ரெண்ட்ஸ எல்லாம் பார்க்கும் போது ஆச்சர்யமா இருக்கு... இப்போ கல்யாணத்துக்கு என்ன அத்தை அவசரம்? மெதுவா செஞ்சுக்கலாமே..."
"அது சரி... ஆனால் உன் அம்மா அப்பா இதை எப்படி எடுத்துப்பாங்களோ..."
"அதெல்லாம் நீங்க கவலைப் படாதீங்க அத்தை... நான் கவனிச்சுக்கிறேன்... அத்தான் மட்டும் வேண்டாம்னு சொல்லலையே... நானும் அதையே தானே சொல்றேன்..." என்றாள் கண்மணி திடமாக!
"ம்ம்ம்... சரி..." என்றாள் காஞ்சனா ஒரு பெருமூச்சுடன்!
🌼🌸❀✿🌷
இந்து எதிர்பார்த்ததுப் போலவே, அன்றைய நாளை கடத்துவது அவளுக்கு ரொம்பவே கடினமாக இருந்தது!
ஆஃபீஸில் நந்தினியை சந்திக்க நேர்ந்தப் போது எழுந்த வழக்கமான மறைமுக தாக்குதல்களை கூட அவள் கண்டுகொள்ளவில்லை! நந்தினி பற்றி அர்ச்சனா வழியாக உண்மை தெரிந்துக்