தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 66 - பிந்து வினோத்
66. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கமலாவின் கேள்வி எதிர்பார்க்காமல் வந்து பவித்ராவை தாக்கியது... சட்டென்று என்ன சொல்வது என புரியாமல் விழித்தாள் அவள்....
கமலா கேள்வியுடன் அவளை பார்த்துக் கொண்டே இருக்கவும், மெல்ல சமாளித்துக் கொண்டு,
“பிரச்சனையா... அப்படி எதுவும் இல்லை... அத்தை...” என்றாள் பவித்ரா தடுமாற்றத்துடன்!
கமலா வேண்டாம் என்பதாக தலையை அசைத்தாள்!
“எனக்கு முழு விவரம் எல்லாம் வேண்டாம் பவித்ரா... பெருசா எதுவும் இல்லையே?”
“அது... இல்லை அத்தை, அப்படி எல்லாம் எதுவும் இல்லை...” என்றாள் பவித்ரா தயக்கத்துடன்.
“உனக்கு தெரியுமோ தெரியாதோ பவித்ரா, எனக்கு ஒரு பெண் குழந்தை வேணும்னு ரொம்ப ஆசை பட்டேன்... ஆனால் அது என்னவோ கடவுள் எனக்கு நான் ஆசை பட்டதை கொடுக்கவே இல்லை... உன்னைப் போலவே பாரதியையும் நான் எனக்கு பிறக்காத மகளா தான் நினைக்குறேன்...”
“தெரியும் அத்தை, சாரி... உங்க கிட்ட... நான்...”
எதை சொல்வது, எதை சொல்லாமல் மறைப்பது என்ற குழப்பத்தினால் மீண்டும் தடுமாறினாள் பவித்ரா!
“என்னம்மா பவித்ரா நீ என் கிட்ட சாரி எல்லாம் சொல்லிட்டு இருக்க! எனக்கு புரியுது... கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வரது எல்லாம் இயற்கை தானே! நீ சொன்னது போல பாரதி நம்ம வீட்டுல வந்து கொஞ்ச நாளுக்கு தங்கி இருக்குறது நல்ல முடிவு தான்..."
விவேக் பாரதி நடுவே ஏற்பட்டிருக்கும் பிளவின் நினைவில் பவித்ராவின் முகம் மாறியது...
"என்ன அப்படி யோசிக்குற பவித்ரா? பாரதி இங்கே வந்த இரண்டு நாள்ல விவேக் சண்டை