மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 51 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
அஹல்யாவின் கை சத்யாவின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தது. இருந்தாலும் பயத்தில் அஹல்யாவின் கை நடுங்குவதை சத்யாவால் உணர முடிந்தது. சத்யாவுக்குமே பயமாக தான் இருந்தது. ஆனால் இப்போது பயந்து நடுங்கிக் கொண்டிருந்தால் எதற்கும் பிரயோஜனமில்லை. பிரசாத் இவர்கள் பக்கம் பாதி கவனத்தை வைத்துக் கொண்டே அஹல்யா கொடுத்திருந்த கவரில் இருந்த பேப்பரில் எதையோ தேடி எடுத்து சரி பார்த்துக் கொண்டிருந்தான். இந்த வீட்டுக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
“உங்களுக்கும் இந்த் வீட்டுக்கும் என்ன தொடர்பு டாக்டர்?” சத்யா தப்பிக்க வழி யோசித்துக் கொண்டே, அவனிடமே கேட்டாள்!
“ஹேய் வாயை மூடிட்டு இருன்னு சொன்னேனே கேட்க மாட்டீயா நீ? முதல்ல உன்னை பரலோகம் அனுப்பி வைக்கிறேன். அதான் சரி!” பிரசாத் ஒரு அடி எடுத்து வைத்திருப்பான். சத்யா தூக்கி எரிந்த டாய் கார் ஒன்று பறந்து அவனை நோக்கி வந்தது.
சத்யா எதிர்பார்த்தது போல பிரசாத் திகைக்கவில்லை. ஈசியாக சுதாரித்து விலகி கொண்டு கோபமாக அவளை நோக்கி வந்தான்.
🌼🌸❀✿🌷
சத்யாவிற்கு ஆபத்து என்று தெரிந்ததற்கு மேல் சக்தியால் அமைதியாக இருக்க முடியவில்லை. இதற்கு மேல் நேரம் காலம் பார்த்துக் கொண்டிருப்பது வீண் என்பதுப் புரிய, ஒரே ஒரு கையால் அந்த குழாயை பிடித்துக் கொண்டு. முழு பலத்தையும் திரட்டி காலில் அணிந்திருந்த ஷூவினால் அந்த ஜன்னல் கண்ணாடி மீது இடித்தாள். கண்ணாடி நொறுங்கியது. சக்தியின் கால்களில் பல இடங்களில் அந்த கண்ணாடி துகள்கள் குத்தி கிழித்தது.
சக்தியை அது அசைக்கவில்லை. நொறுங்கிய கண்ணாடியின் வழியே கிடைத்த சின்ன இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு உள்ளே குதித்தாள். கூர்மையான கண்ணாடி முனைகள் அவளின் உடம்பில் பல இடங்களில் குத்தி கிழித்தது.
சத்யா நோக்கி அடி எடுத்து வைத்திருந்த பிரசாத், திடீரென ஜன்னலை உடைத்துக் கொண்டு