பக்கம் சென்று நின்றாள் சக்தி.
“உன்னை பார்த்தப் பிறகு தான் உயிரே வந்துச்சு சக்தி. சூப்பர் வுமன் மாதிரி பறந்து வந்தீயே. மறக்கவே மாட்டேன்,” என்றாள் சத்யா!
“உன் கிட்ட கத்தியோட அவன் வரதை பார்த்த உடனே வேற எதுவும் தோணலை சத்யா. உன்னை காப்பாத்தனும்னு மட்டும் தோணிச்சு. எதையும் யோசிக்காம வந்தேன். எனக்கு கிடைச்சிருக்க ஒரே ஃப்ரென்ட் நீ. உன்னை அவ்வளவு ஈசியா விட்டுற முடியுமா?” என்றாள் சக்தி!
சக்தி சாதாரணமாக சொன்னாலும் சத்யாவின் மனம் நெகிழ்ந்தது.
“எனக்குத் தெரியும் சக்தி. நீ என்னை வந்து காப்பாத்துவேன்னு!”
“அப்போ தேன் வருவார்ன்னு நீ நினைக்கலையா?”
“அவரு இதே கேள்வியா கேட்டா, அவரு வருவாருன்னு நினைச்சேன்னு சொல்லி இருந்திருப்பேன்!”
அந்த அடிப்பட்டு ரத்தம் கொட்டும் நிலையிலும் சிரித்தாள் சக்தி.
“சத்யா அவங்க அடிப்பட்டு இருக்காங்க. இப்போ கதை பேசிட்டு இருக்க?” தென்றல்வாணன் அவர்கள் இருவரும் நின்றிருந்த இடத்திற்கு வந்தான்.
“சக்தி, ஆம்புலன்ஸ் இங்கே வந்தாச்சு! விஜயன் சக்தியை டாக்டர் கிட்ட அழைச்சுட்டுப் போங்க!” தென்றல்வாணனின் கட்டளையை ஏற்று கான்ஸ்டபிள் விஜயன் டாக்டர் இருந்த இடத்திற்கு சக்தியை அழைத்துச் சென்றார்.
தென்றல்வாணன் இப்போது சத்யாவின் பக்கத்தில் வந்து நின்றான்.
“சத்யா, பயமுறுத்திட்டீயே! எத்தனை தடவை சொல்லி இருக்கேன். இதுல எல்லாம் தலைப்