தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
45. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
புன்னகை மாறாமலே, "நானே திடீர்னு யோசிச்சு தான் கோவிலுக்கு போனேன் கீதா... சரி, உன்னை வேற எதுக்கு தொந்தரவு செய்யனும்னு தான் கூப்பிடலை..." என்றாள் காஞ்சனா!
"என்ன அத்தை நீங்க? இதுல தொந்தரவு என்ன?"
"சஞ்சீவ் கல்யாண விஷயம் ஒரே குழப்படியா இருக்கே... அது தான் கொஞ்சம் மனசை தெளிவாக்க கோவில் போகலாம்னு தோணிச்சு..."
"அப்படி என்ன அத்தை புதுசா குழப்பம்????"
"வேற என்ன, சஞ்சீவ் கண்மணியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறான்... கண்மணியோ, அவனுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம் மேலே படிக்கிறேன்னு சொல்றா..."
"இதுவும் நல்லது தானே அத்தை... சஞ்சீவுக்கு பிடிச்ச மாதிரியே பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்... கண்மணிக்கு இன்னும் வயசாகலையே, அவ படிச்சுட்டு கல்யாணம் செய்துக்கட்டுமே..."
"நீ சொல்றதும் சரி தான்... ஆனால் சஞ்சீவுக்கு மட்டும் பிடிச்ச பொண்ணா இல்லை... எனக்கு, உனக்கு எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணை பார்ப்போம்... நான் இப்படி தான் யோசிச்சு வச்சிருக்கேன் கீதா... ரொம்ப அதிகமா இல்லாம, தேவைக்கு படிச்ச பொண்ணா, வீட்டை கவனிச்சுக்குற பொண்ணா இருந்தால் போதும்... பணம் எல்லாம் தேவை இல்லை... சஞ்சீவுக்கு அப்படி ஒரு பொண்ணு அமைஞ்சா, நீயும் உன் விருப்பம் போலவே வேலைக்கு போகலாம்... என்ன சொல்ற? "
கீதா உடனே பதில் சொல்லவில்லை, சில வினாடிகள் யோசித்து விட்டு,
"நமக்கு எல்லாம் பிடிச்சா நல்லது தான் அத்தை... ஆனால், முக்கியமா சஞ்சீவுக்கு தானே பிடிக்கனும்... அவருக்கு பிடிச்ச பொண்ணு வேலைக்கு போறவளா இருந்தாலும் பரவாயில்லை.... எனக்கு இப்போ வேலைக்கு போற ஆசை எல்லாம் பெரிசா இல்லை... அப்படி போகணும்னு நினைச்சிருந்தா உங்களையே கேட்டிருப்பேன்... நீங்க இப்போ வேண்டாம்னு