மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 53 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“பார்த்தீயா சக்தி, நீ வேண்டாம்னு சொன்ன சர்டிஃபிகேட்டை சவீதாக்கு கொடுத்திருக்காங்க. நியூஸ்பேப்பர்ல நியூஸ் வந்திருக்கு!” சத்யா கையிலிருந்த செய்தி தாளை சக்தி பக்கம் காட்டினாள்!
ஹாஸ்பிட்டல் கட்டிலில் அமர்ந்திருந்த சக்தி, செய்தித்தாளை வாங்கி படிக்க எந்த ஆர்வமும் காட்டவில்லை. மாறாக,
“நான் வேண்டாம்னு சொல்லலை சத்யா. அது உனக்கும் சவீதாக்கு கொடுக்க வேண்டிய ஹானர்ன்னு சொன்னேன். நீ மட்டும் தான் ஆரம்பத்துல இருந்தே அஹல்யா பக்கம் இருந்து யோசிச்ச. அதே போல சவீதா மாதிரி இருக்கவங்களுக்கு இந்த மாதிரி பாராட்டு ரொம்ப அவசியம்,” என்றாள்.
“சவீதா உன் பேரு என் பேரெல்லாம் கூட இதுல சொல்லி இருக்கா!”
அப்போது சாந்ததுரை டாக்டர் கோட் அணிந்து அறைக்குள் வந்தான்.
“ஹலோ லேடி ராம்போ, வலி எல்லாம் போயிடுச்சா? ஸ்டிட்ச் போட்ட இடம் எப்படி இருக்கு?” சக்தி பற்றி இருந்த ரிப்போர்ட்டை எடுத்துப் படித்துக் கொண்டே கேட்டான் சாந்ததுரை!
“வலி எதுவுமில்லை SD. சாரி, அன்னைக்கு உங்க கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்க மாட்டேன்னு சின்ன குழந்தை மாதிரி சொல்லிட்டேன்,” என்றாள் சக்தி.
“இட்ஸ் ஓகே ராம்போ. என் கண்ணும் அன்னைக்கு கொஞ்சோண்டு தப்பா தான் பார்த்துச்சு. நானும் சாரி சொல்லிக்குறேன்,” என்றான் சாந்ததுரை!
அவர்களின் பேச்சை சுவாரசியத்துடன் கவனித்துக் கொண்டிருந்த சத்யா, இரண்டுப் பேரின் பேச்சின் நடுவே குறுக்கிட்டுப் பேசினாள்.
“அப்படியே ஒரு ஐ லவ் யூ வும் சொல்லுங்க டாக்டர். அதுவும் அப்படியே முடிஞ்சிடும்!”