தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
49. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
டிவி பார்ப்பதாக காட்டிக் கொண்டு லிவிங் ரூமில் அமர்ந்திருந்த சஞ்சீவின் மனம் இந்துவை சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது!
காஃபி ஷாப்பில் அவள் அவனிடம் பேசிய விதமும், சொன்ன பதிலும் அவனுக்கு வருத்தத்தையும் கொடுத்திருந்தது, கோபத்தையும் வரவழைத்திருந்தது! ஆனாலும் இந்துவை வெறுக்க அவனால் முடியவில்லை!
அவளை மறப்பதை பற்றி அவனால் யோசிக்க கூட முடியவில்லை...!
அன்று முழுநாளுமே என்ன செய்வது என்றுப் புரியாமல் தான் இருந்தான்...!
சில நிமிடங்களுக்கு முன், அவன் அருகே நடந்த ராஜீவ் – கீதா பேச்சு அவனின் கருத்தை கவர்ந்திருந்தது...
கீதா யாரையும் அத்தனை சுலபத்தில் உதாசீனப் படுத்துபவள் இல்லை... அப்படி பட்டவள் ஃபோனை எடுக்காமல் இருக்கிறாள் என்றால்...???
ஒருவேளை அண்ணியை ஃபோனில் அழைத்தது இந்துவாக இருக்குமோ என்றக் கேள்வி சின்ன சந்தேகமாக எழுந்து மெல்ல மெல்ல அவனின் மனதை மொத்தமாக ஆக்ரமித்தது!
சில நிமிடங்கள் செல்ல, அதற்கு மேல் ஆர்வத்தை கட்டுப்படுத்த இயலாமல், அவசரமாக ஒரு ஐடியா யோசித்து, கீதாவிடம்,
“அண்ணி உங்க ஃபோன் தாங்களேன், நான் ஒரே ஒரு கால் பண்ணிட்டு தரேன்...” என்றான்.
சஞ்சீவ் அவனின் ஃபோனை ஆஃபீஸிலேயே வைத்து விட்டு வந்தது கீதாவிற்கும் தெரியும் என்பதால் எதுவும் சொல்லாமல் தன் மொபைலை எடுத்துக் கொடுத்தாள்.
அதை வாங்கிக் கொண்டு வீட்டின் தோட்டம் பக்கம் வந்த சஞ்சீவ், ரீசன்ட் கால்ஸ் லிஸ்ட்டில் கடைசியாக வந்திருந்த அழைப்பை பார்த்தான். அவன் நினைத்ததுப் போலவே அது இந்துவிடம்