தெரியுமா? அவரை செட்டில் ஆகாம இருக்க செய்ய, அக்ரஸிவ்வா கன்னாபின்னான்னு அடிக்க ட்ரை செய்வாங்க... இதே தான் உன் தங்கை செய்ததும்... உனக்கு தான் எல்லாம் தெரியுமே... என் சார்ம்ல இருந்து தப்பிக்க அவ அப்படி எல்லாம் கத்துவா... ஆனா நான் எல்லாம் கல்லு மாதிரி... எத்தனை அடிச்சாலும் தாங்குவோம்ல...!!!”
தியாகராஜன் சொன்ன விதத்தில் விஜய் முகத்தில் புன்னகை தோன்றியது!
“அது சரி...!!! என்னது சார்மா? உனக்கா? இருந்தாலும் இது ரொம்ப ஓவர்டா மச்சான்...!!!!”
தியாகு இதற்கு பதில் சொல்ல தொடங்கும் முன்பே கீதா நடந்து செல்வது விஜயின் கண்ணில் பட்டது!
“ஹேய் ஹேய் தியாகு! கீதா கிச்சன் போறா... நானும் போறேன்...”
விஜய் துள்ளிக் குதிக்காத குறையாக சொல்லவும், தியாகராஜன் தலையில் அடித்துக் கொண்டான்!
“எப்போ பாரு கீதா முந்தானையை பிடிச்சுட்டு சுத்துற வேலை தானே உனக்கு! அப்புறம் என்ன புதுசா என்னவோ இப்போ தான் பார்க்குற மாதிரி பில்ட் அப் கொடுக்குற?”
“நீ வேற கடுப்பெத்தாதேடா தியாகு... நீ உன் ஒய்ஃபை தொலைச்சீயோ இல்லையோ, எனக்கு இவ்வளவு நாளா இருபத்தி நாலு மணி நேரமும் அவளை தேடுற வேலை தானே... காஞ்சு போய் கருவாடா இருக்கேன்... இப்போ தான் பிரின்சஸ் கிடைச்சாச்சே... இனி நீயாச்சு, அவ ஆச்சு... நான் கீதாவோட செகன்ட் ஹனிமூன் போகலாம்னு இருக்கேன்...”
“நல்ல அண்ணன்டா நீ!!!! பிரின்சஸ், பிரின்சஸ்ன்னு கீர்த்தி முன்னால உருகுறது என்ன, இப்போ பேசுறது என்ன!!!!”
“மச்சான்...! என் தங்கை மேல எனக்கு பாசம் இருக்கு, ஆனா, கீதா விஷயம் வேற...!!!! ஹி ஹி ஹி... நீ சின்ன பையன், இதெல்லாம் நான் உனக்கு சொல்லி தர முடியாது... உனக்கும் பிரின்சஸ்க்கும் நடுவே எல்லாம் சரியான பிறகு நீயே தெரிஞ்சுப்ப... கீதா திரும்பி வந்திர