தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
54. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இந்து என்ன செய்வது என்று முடிவு செய்வதற்கு முன்பே அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்திய சஞ்சீவ்,
“இந்து யூ லுக் வெரி பியூட்டிஃபுல்... அதுவும் இந்த மாதிரி எல்லாம் பார்த்தா நான் என்ன செய்றது...” என்று சொல்லிக் கொண்டே, குனிந்து, அவள் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டான்.
சஞ்சீவின் நடவடிக்கைகளினால் குழம்பி போய் இருந்த இந்து, அவன் அவளின் அருகில் நெருங்கி வந்தப் போது கலவரம் அடைய தான் செய்தாள்... ஆனால், அவளருகே நெருங்கி வந்து நின்ற சஞ்சீவின் பேச்சிலும், முத்தத்திலும் முழுதாக தன்னை மறந்து மயங்கிப் போனாள்!
கம்பெனி ஒன்றை தவிர, காதல் கத்திரிக்காய் எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாம் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தவளின் மனதில் காதல் உணர்வுகளை ஏற்படுத்தியவன் சஞ்சீவ் மட்டுமே... இப்போதைய பிரிவும் கூட அவள் விரும்பி ஏற்றுக் கொண்டது இல்லையே... சஞ்சீவை பார்க்கவாவது வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருந்தவளுக்கு எதிர்பாராமல் கிடைத்த அவனின் அருகாமையும், முத்தமும் புது விதமான உணர்வலைகளை அவளுக்குள் ஏற்படுத்தியது...
சில வினாடிகளுக்கு முன் அவள் மனதில் இருந்த குழப்பங்கள், கேள்விகள் எல்லாம் இப்போது அவள் நினைவில் இருந்து மாயமாக மறைந்துப் போய் இருந்தது... மொத்தத்தில் சஞ்சீவ் ஒருவனை தவிர இந்துவின் மனதில் மற்ற நினைவுகள் எதுவுமே இல்லாமல் போய் இருந்தது!
சில பல வினாடிகளுக்குப் பிறகு, எங்கேயோ தொலைவில் ஒலித்த ஹாரன் சத்தத்தில் தன்னிலை அடைந்த இந்து, அப்போது தான் சஞ்சீவின் அணைப்பில் நிற்பதை உணர்ந்தாள்.
ஏதோ மேலே பட்ட நெருப்பை உதறுவதுப் போல அவனை தள்ளி விட்டு விலகிச் சென்று நின்றாள். அவளின் இந்த திடீர் மாற்றம் சஞ்சீவிற்கு எந்த ஆச்சர்யத்தையும் கொடுத்ததாக தெரிய வில்லை!