தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 19 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“நீயும் அப்பாவும் பர்த்டேக்கு போங்க... நானும் அம்மாவும் ப்ரியாவோட ஸ்கூலுக்கு போறோம்...”
வர்ஷா திரும்பவும் தங்களின் ப்ளானை சொல்ல, விக்கிராந்த் வர்ஷாவிடம் எதுவும் சொல்லாது ராஜமை பார்த்தான்!
“ஆமாம் விக்கி, நீயும் அப்பாவும் போயிட்டு வாங்க...” என்றாள் ராஜமும் அமைதியாக!
பக்கத்தில் இருந்த ப்ரியாவின் மனதில் தான் மெல்லிய பூகம்பம் ஏற்பட்டது!
பங்க்ஷனுக்கு வரப் போகிறார்களா? அப்போது ஸ்ரீயின் ட்ராமவையும் பார்ப்பார்களே... ஸ்ரீ மட்டும் அவள் தான் ‘விக்கி’ என்ற பெயரை சொன்னாள் என்று சொல்லிவிட்டால் என்ன ஆகும்!!!
திகைப்பும் யோசனையுமாக விக்கிராந்தை பார்த்தாள் ப்ரியா...
அதே நேரத்தில், இது வரை எனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தவர்கள், என்னுடைய வருங்கால மனைவியின் வீட்டிற்கு வராமல் அது என்ன உன்னுடன் வருவது என்ற கேள்வியும் கோபமுமாக ப்ரியாவை பார்த்தான் விக்கிராந்த்...
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தப் படி இருந்தார்கள்!
🌼🌸❀✿🌷
ப்ரியாவின் மனதில் பல ரகமான குழப்பங்கள் இருந்தன... ஆனால், அதையும் தாண்டி அவளின் மனம் விக்கிராந்திற்காக வருந்தியது... ராஜமும், வர்ஷாவும் ஆர்த்தியின் பர்த்டே பார்ட்டிக்கு போகாமல் தவிர்ப்பது சரி இல்லை என்று தான் அவளுக்கு தோன்றியது... ராஜமிடம் நேராகவே அப்படி செய்யாதீர்கள் என்று சொல்லி விடலாமா என்று கூட யோசித்தாள். ஆனால் அது போல தானாக அந்த பேச்சை தொடங்கவும் அவளுக்கு மனம் வரவில்லை... அதனால அதை மனதினுள்ளே வைத்து குமைந்துக் கொண்டிருந்தாள்...