தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 19 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கிருத்திகா அறையில் இருந்து சென்றப் பிறகு விஜய் யோசனையுடன் குறுக்கும் நெடுக்கும் நடக்க தொடங்கினான்!
கீதா அமைதியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்...
சில நிமிடங்களுக்குப் பிறகு, “நீ என்ன நினைக்குற கீத்ஸ்?” என மனைவியிடம் வினவினான் விஜய்.
“ஒன்னும் சொல்ல முடியலைங்க... நீங்க தியாகு அண்ணா கிட்ட பேசி ஏன் அப்படி சொன்னாருன்னு கேளுங்க...”
“கேட்கிறேன்...”
“ஆனாலும்... பிரின்சஸ் பத்தி யோசிச்சா பாவமா இருக்கு...”
“ஆமாம் கீத்ஸ்... ஆனால் எனக்கு என்னவோ இதுவும் ஒரு விதத்துல நல்லதுன்னு தோணுது...”
“ச்சே என்ன இப்படி சொல்றீங்க???”
“பொறுத்திருந்து பார் கீத்ஸ்... எல்லாம் நன்மைக்கே...”
“ஆனாலும் அவ தெரிஞ்சுக்கனும்னு வந்து பழைய விஷயங்க பத்தி கேட்டா, உண்மையை சொல்லிடுவீங்களா????”
“கீத்ஸ்...! தியாகு அப்படி நடக்க விட மாட்டான்... மத்தப்படியும் அதுக்கு முன்னாடியே அவளுக்கு பழைய விஷயம் எல்லாம் ஞாபகம் வந்திடும்... இது என்னோட hunch!”
“ஞாபகம் வந்திருமா????”
கீதாவின் கண்கள் மெல்லிய கலவரத்துடன் விரிந்தன...