(Reading time: 6 - 11 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 21 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

கிருத்திகா ஏதாவது சொல்வாள் என்பதுப் போல சில வினாடிகள் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த தியாகராஜன், அவள் அமைதியாகவே இருக்கவும், அவனே பேசினான்!

  

சரி கீர்த்தி... உனக்கு நான் சொன்னது கொஞ்சம் குழப்பமா, ஏன் ஷாக்கிங்கா கூட இருக்கலாம்... பொறுமையா யோசிச்சுப் பாரு நான் சொல்றதுல இருக்கும் நியாயம் உனக்கும் புரியும்... இது நம்ம இரண்டு பேருக்கும் இப்போன்னு இல்லை, நாளைக்கு உனக்கு நினைவு வந்தப்புறமும் உதவும்... நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு, பொறுமையா யோசிச்சுப் பாரு...”

  

சொல்லிவிட்டு தியாகராஜன் எழுந்து சென்று கை கழுவி மாடிக்கு செல்வதையே அமைதியாக பார்த்திருந்தாள் கிருத்திகா.

  

அவன் சொல்வது குழப்பமாக, ஷாக்கிங்காக இருக்குமாமா!!! கிருத்திகாவிற்கு கடுப்பாக இருந்தது!

  

அவள் யார் என்று தெரியாமல் இருந்த நாட்களே பரவாயில்லை என்று நினைக்கும் அளவிற்கு அவள் யார் என்று தெரிந்த பிறகு இந்த ஸ்டோன் ஸ்டேச்யூ ராஜ் அவளை கடுப்பேற்றிக் கொண்டே இருக்கிறான்!

  

முதலில் அமைதியாக இருந்தான், பிறகு டிவோர்ஸ் என்றான், அதற்கு பிறகு வேறு பெண்ணுடன் தொடர்பு என்றான்... இப்போது அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்றாலும் பேச்சலர் – ஸ்பின்ஸ்டர் வாழ்க்கை வாழ வேண்டும் என்கிறான்!

   

கிருத்திகா கடைசி ஒன்றை பற்றி மீண்டும் யோசித்தாள்... அவனின் மனைவி, மனைவி எனும் நினைவுடன் இருந்தால் மட்டுமே அவர்களுக்குள் தாம்பத்தியம் என்கிறான் மிஸ்டர் ஸ்டோன் ஸ்டேச்யூ தியாகராஜன்!!!

  

மற்றவற்றுக்கு கம்பேர் செய்யும் போது, இது நாட் பேட் தான்!!!

   

இருந்தாலும், இது தானா ராஜ் அவளை விட்டு தள்ளி தள்ளி சென்று கற்சிலை போல தோற்றம் அளித்ததன் காரணம்...!

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.