(Reading time: 8 - 16 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 22 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

விக்கிராந்தும், கணபதியும் பர்த்டே பார்ட்டியில் இருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தப் போது, நேரம் இரவு ஒன்பதை கடந்திருந்தது!

  

ராஜம் அவர்களுக்காக வாசல் கதவை திறக்கவும், , “நீங்க மூணு பேரும் எப்போ வந்தீங்க? ஆர்த்தி வீட்டுல உன்னையும் வர்ஷாவையும் தான் எல்லோரும் ரொம்ப மிஸ் செய்தாங்க... உங்களுக்காக ஸ்பெஷலா கேக், ப்ரியாணி எல்லாம் கொடுத்து அனுப்பினாங்க,” என லேட்டஸ்ட் நியூஸ் ப்ராட்கேஸ்ட் செய்துக் கொண்டே உள்ளே வந்தார் கணபதி!

  

“நீங்க இரண்டு பேரும் என் சமையல்ல இருந்து எஸ்கேப் ஆகி ப்ரியாணியை ஒரு வெட்டு வெட்டுனீங்கன்னு சொல்லுங்க...”

  

ராஜமின் கிண்டல் பேச்சு காதில் விழுந்தாலும், விக்கிராந்த் நின்று மறுமொழி எதுவும் சொல்லவில்லை. அமைதியாக தன் அனறைக்குள் சென்றான். ராஜமும் ஜெயந்தியுடன் பேசியதை பற்றி சொல்ல, கணபதியை தொடர்ந்து சென்றாள்.

  

உள்ளறையில் இருந்து இதை எல்லாம் கவனித்த வர்ஷாவும், ப்ரியாவும், ஸ்கூலில் இருந்து திரும்பியது முதலே தொடர்ந்துக் கொண்டிருந்த அவர்களின் பேச்சை தொடர்ந்தார்கள்.

  

இருவரும் பேசினார்கள் என்றாலும், பெரும்பாலான நேரம் பேசியது என்னவோ வர்ஷா தான்! அவளின் காலேஜில் நடந்த கலாட்டாக்கள், பயிற்சி மருத்துவராக நோயாளிகளை சந்திக்கும் போது நேர்ந்த சுவாரசியமான சம்பவங்கள், சாரீ, சுரிதார், லேட்டஸ்ட் ஃபேஷன் என பல ரகமான தலைப்புகளில் வர்ஷா பேச, ப்ரியா அவளுக்கு நல்ல கம்பெனியை கொடுத்து கொண்டிருந்தாள்!

   

ஆரம்பத்தில் தன் வழக்கமாக அமைதியாக தலை அசைத்து, ‘ம்’ போட்டுக் கொண்டிருந்தவளை வர்ஷாவிற்கும் அவளுக்கும் நடுவே இருக்கும் ரசனை ஒற்றுமை தனாக ஈர்த்துப் பேச வைத்திருந்தது!

  

ஸ்கூலில் கோகிலா, ஸ்ரீ, ரூமில் சாதனா என அவளின் வயதை ஒத்தவர்கள் ப்ரியாவை சுற்றி இருக்க தான் செய்தார்கள்... அவர்கள் அனைவருமே சகஜமாக பேசக் கூடியவர்களும் தான்!

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.