அவன் சொல்வதுப் போல, ஒருவேளை, நாளை அவளுக்கு நினைவு திரும்பி விட்டால்...
யோசிக்கும் போதே அப்படி என்ன தான் முன்பு அவர்களுக்குள் நடந்திருக்கும் என அறிந்துக் கொள்ளும் ஆர்வம் கிருத்திகாவிற்குள் மீண்டும் பொங்கியது!
மனைவியிடம் இவ்வளவு அன்பு வைத்திருப்பவன் தவறாக எதுவும் செய்திருக்க வாய்ப்பில்லை!
அப்படி என்றால் அந்த ராட்சஸி (அது தாங்க ஓல்ட் மெமரி கிருத்திகா!!!) என்ன செய்தாள்???
அவளுக்கு எல்லாம் இப்படி உருகும் கணவன்...! ச்சே... என்ன உலகமடா இது!!! அநியாயமா இருக்கே...!
தன்னை அந்த ‘ஓல்ட் கிருத்திகா’வாக நினைக்க முடியாமல் யாரோ ஒருத்தியை போல் யோசித்து குமைந்தாள் கிருத்திகா!
சரி, இப்போது என்ன செய்வது????
யோசித்தவளின் கண் முன் அவளின் ராஜின் முகம் வந்து நின்றது!
எவ்வளவு நல்லவன்... அருமையானவன் அவன்... அவனை விட்டு எந்த உறவும் இல்லை என்று தள்ளி இருப்பதா????
அது அவளால் முடியுமா????
ஹுஹும்...!
எத்தனை எத்தனையோ குழப்பங்கள் இருந்த போதும், ராஜைப் பார்த்த முதல் நொடியிலேயே, இவன் தான அவள் கணவன் என்று தெரிந்துக் கொண்ட வினாடியிலேயே அவளுக்கு அவனை