“இல்ல விவேக், அப்படி எல்லாம் எதுவுமில்லை! நானும் பாரதியும் அதை எல்லாம் பேசி தெளிவு செய்தாச்சு... இனி மேலாவது அவங்களை குழப்பாம போய் சமாதானமாகும் வழியைப் பாரு...”
“அதுல எதுக்குப்பா உனக்கு சந்தேகம்! பாரதிக் கிட்ட பேச தான் போறேன்... ஆனால் அதுக்கு முன்னாடி வேற ஒரு வேலை இருக்கு! அந்த டாக்டர் தாமஸை போய் பார்க்கனும்...” என்றான் விவேக் கோபமாக!
“இப்போ அது தேவையா விவேக்? முதல்ல பாரதியை பார்த்து பேசு...”
“இல்லை லாவி, இதுக்கு மேல இந்த விஷயத்தை பத்தி பேசி ட்ராக் செய்ய எனக்கு விருப்பம் இல்லை... அதனால இன்னையோட எல்லாத்தையும் முடிக்க வேண்டியது தான்!”
“பொறுமையா எதையும் செய் விவேக்... விக்னேஷ் இன்னைக்கு நைட் வரார், இல்லைன்னா, நானும் உன்னோடு வருவேன்...”
“நீ கவலைப் படாதே லாவி! நான் பொறுமையாவே தான் எல்லாம் செய்றேன்!”
“சரிடா, பத்திரம்!”
“லாவி, இந்த ட்யூமர் விஷயம் எல்லாம் அம்மா அப்பாக்கு தெரிய வேண்டாம்...”
“நீ இதை சொல்லனுமா என்ன? விக்னேஷை தவிர வேற யார் கிட்டேயும் நான் இந்த விஷயத்தை சொல்லலை... சொல்லவும் மாட்டேன்...”
“ரொம்ப தேங்க்ஸ் லாவி!”
🌼🌸❀✿🌷
கண்களில் இன்னமும் கலக்கத்துடன் அவனை பார்த்தபடி அமர்ந்திருந்த பாரதியை இறுக