(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

57. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

முன் தின இரவில், மனதில் திட்டமிட்டு இருந்ததை நிறைவேற்ற காலையில் சீக்கிரமே கண் விழித்தாள் வீணா. இந்து அப்போதும் சரியாக தூங்காமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்! வீணாவின் மனதில் எப்போதும் போல தோழியின் மீது நேசம் பொங்கியது. இந்து இரவு முழுவதுமே சரியாக தூங்க வில்லை என்பது வீணாவிற்கும் தெரியும்!

   

எப்படியாவது இந்துவையும் சஞ்சீவையும் சேர்த்து வைத்து விடவேண்டும் என்ற அவளின் எண்ணம் இன்னும் வலுவானது!

  

"இந்து..." மெதுவாக அழைத்தாள் வீணா.

  

"வீணா? விடிஞ்சிடுச்சா??" என்ற கேள்வியுடன் உடனே எழுந்தாள் இந்து.

  

"ஆமா... ஆனா, அஞ்சு மணி தான் ஆகுது இந்து. எனக்கு ஒரு இம்பார்டன்ட் வேலை இருக்கு... நேத்து மறந்துட்டேன்... நான் வீடு வரைக்கும் போயிட்டு வரட்டுமா? ஒரு மணி நேரத்தில வந்துருவேன்... நீ அது வரைக்கும் ரோஷினியை கொஞ்சம் பார்த்துக்குறீயா? அவ எப்படியும் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குவா... சீக்கிரம் எல்லாம் எழுந்திருக்க மாட்டா..."

  

"வீணா, நீ இவ்வளவு சொல்லனுமா என்ன? ரோஷினியை பார்த்துக்க சொன்னா நான் பார்த்துக்க மாட்டேனா? ரோஷினி செல்லம் தான் ரொம்ப சமர்த்தாச்சே... "

  

"தேங்க்ஸ் இந்து... அவினாஷுக்கு கொஞ்சம் ஹெல்ப் வேணும்னு சொன்னார்... அது தான்... நான் சீக்கிரம் வந்துடுறேன்... கனகா வீட்டுல தான் இருக்கா! உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே?"

  

"அதெல்லாம் ஒன்னும் இல்லை வீணா... நீ மெதுவா வா... எர்லி மார்னிங் டைம்... ட்ரைவ் செய்யும் போது பத்திரம்... பார்த்து கவனமா போயிட்டு வா...."

  

இந்துவிடம் விடைப் பெற்ற வீணா, சில நிமிடங்களிலேயே கிளம்பி தயாராகி காரில் அங்கிருந்து கிளம்பினாள். நேராக அர்ச்சனா இருந்த மருத்துவமனைக்கு சென்றாள். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போன்ற அந்த காஸ்ட்லியான மருத்துவமனையில் பென்ஸ் காரில் வந்த

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.