தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 23 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தன் அறைக்கு திரும்பிய விக்கிராந்த், கட்டிலில் படுத்தான்!
தூக்கம் வருவதற்கான அறிகுறி ஒன்றுமே அவனிடம் இல்லை! தெளிவாக இருந்த அவனின் மனம் இப்போது குழம்பிப் போயிருந்தது! இதுப் போன்ற குழப்பங்கள் அவனுக்கு எப்போதுமே ஏற்பட்டது இல்லை... ஒரு முடிவு எடுத்தால், அதில் தெளிவாக இருப்பவன் அவன்!
ஆர்த்தியை அவனுக்கு பார்த்ததுமே பிடித்திருந்தது... அவளின் குழந்தைத்தனம் நிறைந்த குணம், பிடிவாதம் எல்லாமே அவனுக்கு இப்போது பரிச்சயமாகி இருந்தது... ஆனால்...
அந்த ‘ஆனால்’ சின்னதாக அல்லாமல், பெரிய கேள்விக்குறியாக அவனின் மனதில் உறுத்தியது!
அம்மா அவனிடம் ப்ரியா போட்டோ காண்பித்து பேசியப் போது வேண்டாம் என்று ஏன் சொன்னான்?
“...எனக்கு மனைவியா வர போறவ ஒரு தென்றல் மாதிரி இருக்கனும்... நல்ல கலகலப்பா இருக்கனும்... பார்க்கும் போதே மனதில் ஒரு சந்தோஷம் வர மாதிரி இருக்கனும்... என்னுடைய எல்லா முயற்சிக்கும் உறுதுணையா இருக்கனும்... இன்னும் நிறைய எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கு...”
ஷார்ட்டாக சொல்ல வேண்டுமென்றால், ‘ரெடிமேட், நோ எக்ஸ்ட்ரா ப்ராப்ளம்ஸ் அட்டாச்ட்’ மனைவி வேண்டும் என்று அவன் நினைத்தான்... அதற்காக தான் அவனுக்கு பிடித்ததுப் போல பெண் தேட முடிவு செய்தான்... ஆர்த்தியை தேர்வும் செய்தான்... ஆனால்...
மீண்டும் ஒரு கேள்வி அவனுள் எழுந்தது!
ஆர்த்தி அவன் நினைத்ததுப் போல எந்த பிரச்சனையையும் கொடுக்காத துணை தானா?? ஹுஹும், அவன் அவளுக்கு ஏற்ற துணை தானா???
ஆர்த்தி அவனுக்கு பரிச்சயமானது முதலே அவனிடம் பல ரகமான எதிர்பார்ப்புகளை முன்