மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 13 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
ப்ரியம்வதாவின் முகத்தைப் பார்த்த கலைவாணி. மீண்டும் குரலை உயர்த்தாமல், பொறுமையாக மகளிடம் பேசினாள்.
"ப்ரியா, வினாயக் கெட்டவரா இருப்பார்ன்னு நானும் நம்பலை. ஆனால் அவர் கிட்ட எதுவோ சரி இல்லை. ஐஸ்வர்யா சொல்றது மாதிரி அவரை விட்டு தள்ளி இருக்குறது தான் நல்லதுன்னு நானும் நினைக்கிறேன்!"
"அந்த வினாயக் பத்தி நமக்கு எதுக்கு கவலை அத்தை? அவர் எப்படியோ போகட்டும். நாம ப்ரியம்வதா பத்தி தான் யோசிக்கனும். உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்னு இருந்தேன். என்னோட பெரியப்பா மகன் ஸ்ரீனிவாஸ்ன்னு ஒருத்தர் இருக்கார். பெரிய கம்பெனி வச்சிருக்கார். நானும் ராகுலும் எடுத்துக்கிட்ட ஒரு போட்டோல ப்ரியம்வதாவை பார்த்து அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. உங்க கிட்ட பேச ஆசைப் படுறார். இங்கே வர சொல்லட்டுமா? நீங்க அவரை பார்த்து பேசின மாதிரியும் இருக்கும். அவரும் ப்ரியம்வதாவும் சந்திச்ச மாதிரியும் இருக்கும்!" ஐஸ்வர்யா அமைதியான குரலில் கலைவாணியிடம் பவ்யமாக சொன்னாள்.
"இங்கே பாருங்க உங்க வேலையை மட்டும் பாருங்க. என்னை பத்தி நீங்க கவலைப் பட வேண்டாம்!" ப்ரியம்வதா ஐஸ்வர்யாவை மிரட்டுவது போல விரலை நீட்டி பேசினாள்.
"ப்ரியா, என்ன ஆச்சு உனக்கு? எதுக்கு ஐஸ்வர்யா கிட்ட இப்படி நடந்துக்குற? அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு? உனக்கு சீக்கிரம் கல்யாணம் செய்யனும்னு நானும் யோசிச்சிருக்கேன்." கலைவாணி மீண்டும் மகளை அடக்கினாள். பின் ஐஸ்வர்யாவிடம்,
"நீ உன் அண்ணன் கிட்ட பேசி இங்கே வரச் சொல்லு ஐஸ்வர்யா," என்று வருங்கால மருமகளுக்கு அனுமதியும் கொடுத்தாள்.
"நான் பேசுறேன் அத்தை. ஆனா, ப்ரியம்வதாக்கு பிடிக்கலைனா என்ன செய்றது?" ப்ரியம்வதா பக்கம் மின்னல் வெட்டும் பார்வை ஒன்றை வீசினாள் ஐஸ்வர்யா.
"எனக்கு பிடிச்சா ப்ரியாவுக்கும் பிடிக்கும். நான் அவக் கிட்ட பேசிக்கிறேன். நீ உன் அண்ணன்