தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
58. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
வீணா வீட்டிற்கு திரும்பிய போது, அங்கே இந்து அவளுக்காக காஃபியுடன் தயாராக இருப்பதை பார்த்து ஆச்சர்யப் பட்டாள்!
“என்ன இந்து இது??? எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்த? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி இருக்கலாமே?”
இந்து சோர்வுடன் மறுப்பாக தலையை அசைத்தாள்!
“ப்ச்... தூக்கம் வரலை வீணா... அம்மாக்கு ஃபோன் செய்யலாம்னு நினைச்சேன்... ஆனா, அவங்க தூங்கிட்டு இருப்பாங்க, டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு தோணிச்சு...”
“ஆமாம்... நீதான் தூங்கலை, ஆன்ட்டியையாவது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடு...”
காஃபியை கப்’பில் ஊற்றி வீணாவிற்கு கொடுத்தாள் இந்து! அதை வாங்கிக் கொண்டு வீணா ஒரு குஷன் நாற்காலியில் அமர, இந்துவும் காஃபி கோப்பையுடன் தோழியின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்!
“எனக்கு ஒரு ஐடியா தோணிச்சு வீணா!”
“என்ன????”
“எஸ் ஏ இண்டஸ்ட்ரீஸ் மொத்த ஷேர்ஸையும் நந்தினி பேருக்கும், அவ அம்மா பேருக்கும் மாத்த சொல்ல போறேன்... “
“எந்த ஷேர்ஸ் பத்தி பேசுற நீ????”
“என்னுடையதும் அம்மாவுடையதுமா எங்க கிட்ட இருக்க 75 பெர்சென்டேஜ் ஷேர்ஸை தான் சொல்றேன்...”
“மீதி 25 பெர்சென்டேஜ் ஷேர்ஸ் சேகர் கிட்டேயும் அவர் அம்மா கிட்டேயும் தானே இருக்கு?