தொடர்கதை - திருமதி அகத்தியன் - 12 - சசிரேகா
கமிஷனர் அறையில்
அகத்தியனும் நாச்சியாவும் கோபமாக இருக்க கமிஷனர் வியப்பில்
”என்னப்பா இது திடுதிப்புன்னு இரண்டு பேரும் வந்தீங்க, வந்ததில இருந்து எதுவும் பேசாம என்னையே முறைச்சிக்கிட்டு இருந்தா எப்படி? என்ன விசயம்னு சொன்னதானே எனக்குப் புரியும்” என சொல்ல அகத்தியன் கடுமையாகப் பேசினான்
”நாங்க கேட்கற கேள்விகளுக்கு நீங்க சரியான பதில் சொல்லனும்”
”அதுக்கென்ன தாராளமா சொல்றேன்”
”முதல் கேள்வி என் பிறப்போட ரகசியம் என்ன” என நாச்சியா கேட்க அதற்கு கமிஷனர்
”ரகசியமா புரியலையே“
”அம்பேத்கர் நகருக்கு நாங்க போய் வந்தோம்“
”ஓ அப்படியா என்ன நடந்தது, ஏதாவது தடயம் கிடைச்சதா”
”இல்லை எங்களை பத்தின உண்மை தெரியனும்” என்றாள் நாச்சியா
”என்ன உண்மை“
“அங்க இருந்த சிலைகளை பார்த்தோம், ஆண்டாள் நாச்சியா அகத்தியன் அவங்க ரெண்டு பேரோட முகச்சாயல் எங்களை போலவே இருக்கு, இதுக்கு என்ன அர்த்தம்” என நாச்சியா கேட்க கமிஷனர் பதில் அளிக்காமல் தடுமாற அகத்தியனோ
”தயவு செய்து உண்மையை சொல்லுங்க, எங்க இரண்டு பேரையும் ஆசிரமத்தில விட்டவங்க அந்த அம்பேத்கர் நகரை சார்ந்தவங்க அப்படின்னா எங்க பெற்றோர் அந்த ஊரைச்