அவள் முகமெல்லாம் மலர்ச்சியுடன் சந்தோஷம் கொப்பளிக்க சொல்வதை இமைக்காமல் பார்த்திருந்தான் தியாகராஜன்...
“கார்டனும் அழகு... எவ்வளவு யோசிச்சு எல்லாம் செய்திருக்கீங்க...”
அவனால் அவளை விட்டு இம்மி அளவும் பார்வையை அகற்ற முடியவில்லை...
அவளிடம் அந்த வீட்டை சுற்றி காண்பித்து, எப்படி ஒவ்வொன்றையும் தேர்வு செய்தான் என்று சொல்ல வேண்டும் என்று அவனுக்கு ரொம்ப நாளாக ஆசை...
அவன் சொல்வதைக் கேட்டு அவளின் முகம் இப்படி தான் மலரும் என்று கற்பனையும் செய்து வைத்திருந்தான்...
இப்போது, கண்கள் மின்ன அவனின் எதிரே இருந்தவளையே பார்த்திருந்தான்...
“... அந்த கலர்ஃபுல் ஃப்ளவர்ஸ் வெரி ரொமான்டிக்...” என்றாள் கிருத்திகா மெல்லிய வெட்கத்துடன்.
சட்டென அவளின் அருகே சென்று அணைத்துக் கொள்ள வேண்டும் என்று எழுந்த ஆசையை அடக்க தியாகராஜன் பெரிதும் பாடுபட்டான்...
மெல்ல அவளிடம் இருந்து கண்களை திருப்பி, மேஜை மீது அவன் முன் இருந்த காலியான தட்டை பார்த்தவன்,
“நான் உன் கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கேன்... நீ என் மனைவி இல்லை... இதெல்லாம் நான் என் மனைவிக்காக செய்தது... உனக்கும் எல்லாம் பிடிச்சிருக்கதுல எனக்கு சந்தோஷம்... ஆனால், இதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை,” என்றான் உணர்ச்சியற்றக் குரலில்!
அடுத்த சில வினாடிகள், ஊசி விழுந்தால் கேட்கும் அளவிற்கு அங்கே அமைதியில் கழிந்தது...