பார்த்திருந்தான்!
“என்ன பார்க்குறீங்க? எப்போ பாரு நீ என் மனைவி இல்லை இல்லைன்னு என் கிட்ட பாட்டு பாடுறதுக்கு அம்மா அப்பா கிளம்பினப்போ ஏதாவது சொல்லி என்னை அவங்க கூடவே அனுப்பி வச்சிருக்க வேண்டியது தானே?”
தியாகராஜன் இது போன்ற கேள்வியை இந்த நேரத்தில் எதிர்பார்த்திருக்காததால், திகைத்துப் போய் மௌனமாக இருந்தான்.
“என்ன அமைதியா இருக்கீங்க??? உங்களால உங்க மனைவி கீர்த்தியை பிரிஞ்சிருக்க முடியாது, பார்க்காம இருக்க முடியாது... நான் அவ மா...தி...ரி ஆனா, அவ இல்லை அப்படி தானே?”
இதற்கு என்ன பதில் சொல்வது...?
தியாகராஜன் புரியாமல் விழித்தான்!
கிருத்திகாவின் முகத்தில் புன்னகை தோன்றியது...
“இப்படி எல்லாம் உங்களை கேள்வி கேட்பேன்னு நினைச்சீங்களா? ஹி ஹி ஹி... தப்பா நினைச்சுட்டீங்க... நான் கேட்க மாட்டேன்...”
தியாகு அவளையே இப்போதும் அமைதியாக பார்த்தப்படி இருந்தான்.
“ஏன்னு நீங்க கேட்கலைனாலும் சொல்றேன்... உங்களை நான் முதல் முதல் பார்த்ததே என்னோட கணவர் என்னும் உறவோட தான்... இவங்க அம்மா, இவங்க அப்பா, இவங்க அத்தை, இவங்க மாமான்னு சொன்னது போலவே, இவர் உன் கணவர்ன்னு உங்களை காமிச்சு சொன்னாங்க. அதனால அப்போவே எனக்கு உங்க மேல தனி அன்பு வந்ததுல ஆச்சர்யமில்லை... ஆனால், அப்போ கூட உங்க மேல கொஞ்சம் இன்ட்ரஸ்ட் தான் வந்ததுன்னு சொல்லலாம்... என்னை கண்டுக்காம நீங்க உர்ருன்னு இருந்தது கூட எனக்கு என்னவோ சின்னப் பசங்க விளையாட்டு போல தான் இருந்தது... நீங்க சொன்ன அந்த