சொல்றீயா?" என ஆவல் மின்னக் கேட்டான்.
"நல்ல ஆள் தான் நீ!!! சரியான மக்கு!!! இந்த க்ரீன் சாரீ பார்த்தே புரிஞ்சிருக்கனும் தானே? எவ்வளவு கஷ்டப் பட்டு ஞாபகப் படுத்தி, கட்டியே வருஷமான இந்த சாரீயை கட்டி இருக்கேன்..."
"நான் மக்கு தான்... ஆனால் இந்த புத்திசாலி மேடம், இப்படி ஓவர் ஆக்டிவ் மூளையை வச்சு ஓவரா யோசிக்கிறதுக்கு பதில் மூணு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கலாம் தானே?"
அவன் சொன்னதை யோசிப்பது போல மௌனமாக நின்ற தேன்மொழி, பின் மறுப்பாக தலையை ஆட்டினாள்.
"இல்லை... அப்படி சொல்லி இருந்தா அது அண்ணிக்காக, இல்ல அம்மா, அண்ணனுக்காக சொன்னதா இருந்திருக்கும்... இப்போ சொல்றது நானே தானே? அண்ணி சொல்வாங்க, நடக்குற ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும், எது நடந்தாலும் நன்மைக்கேன்னு... நானா என்னை புரிஞ்சுக்க தான் இந்த மூணு வருஷம் போலருக்கு..."
"அது சரி, ரொம்ப ஃபாஸ்டா தான் புரிஞ்சுக்குறீங்க...!!! நான் எல்லாம் முதல் நாள் நீ ‘ஹேய் மாட்டிக்கிட்டீயான்னு’ சொன்னப்போவே ஃப்ளாட் தான்...."
கேலியாக சொன்ன போதும், சத்யாவின் முகத்திலும் பேச்சிலும் பெருமையும், மகிழ்ச்சியும் கலந்தே இருந்தது. பின் வேறென்ன அவனின் தேவதை அவனுக்கு கிடைத்து விட்டாளே!
“சரி சத்யா, வீட்டுக்குள்ளே போவோம்... எல்லோரும் நமக்காக வெயிட் செய்துட்டு இருப்பாங்க,” என்றாள் தேன்மொழி.
“போவோம்... போவோம்... அதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேலை...”
“என்ன??”