தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 30 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
நந்திதாவின் இந்த ‘ரியாக்ஷனை’ எதிர்பார்த்திருந்ததாலோ என்னவோ, துளசி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை!
“நந்து, நீயும் நானும் ரொம்ப வருஷமா ஃப்ரென்ட்ஸ்... என் கிட்ட தேவை இல்லாமல் பொய் சொல்லாதே,” என்று மட்டும் சொன்னாள்!
“சரி, தேவைக்கு மட்டும் சொல்றேன், சரியா ஒசிமம்?”
“இதோ பாரு, நேரம் காலமில்லாம ஜோக் அடிச்சா எனக்கு கோபம் வரும்...”
“உனக்கு கோபம் வந்தா எனக்கு என்ன வந்தது? உனக்கு தான் பி.பி ஏறும்...”
“இங்கே என்கிட்டே இப்படி வாய் கிழிய பேசுறதுல எல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை. இதையே உதய் கிட்ட பேசுறதுக்கு என்ன?”
உதய் என்ற பெயரை கேட்ட உடனே அமைதியாகி போனாள் நந்திதா.
“என்ன அமைதியா இருக்க? உதய்ன்னு சொன்னா மட்டும் அப்படியே சாந்த சொருபினியா மாறிடுற?”
“அதெல்லாம் ஒன்னுமில்லை...!”
“ஹையோ இதோடா...! என்னம்மா லவ்ஸா?”
துளசியின் நேரடி கேள்வியில், நந்திதா திகைத்துப் போனாள்!
“என்ன பேசுற துளசி? உதய் மேல எனக்கு மரியாதை இருக்கு. அவரோட லீடர்ஷிப்பை நான் அட்மைரும் செய்றேன். ஆனால் அதுக்காக லவ் கிவ்ன்னு எல்லாம் சொல்லாதே...”
“ஆமாம் ஆமாம் அவர்ர்ரர்ர்ர்ரர்ர்ர்ர் மேல மரியாதை மட்டும் இருக்கிறதால தானே அந்த