”ஆமா எப்படி உங்களுக்கு கல்யாணம் ஆச்சி அண்ணி”
”என் தலையெழுத்து உங்க அண்ணன் எனக்கு நியாயம் வழங்கறேன்னு தாலியை கட்டிட்டாரு, கடைசி வரைக்கும் எனக்கு நியாயத்தை வழங்கலை அநியாயம்தான் செய்தாரு” என திட்ட அவர்களோ கலகலவெனச் சிரித்தார்கள்
”எதுக்கு இந்தச் சிரிப்பு”
”இல்லை அண்ணி இப்படிதான் நடக்கும்னு நாங்க எப்பவோ நினைச்சோம், கொஞ்சம் நாளானாலும் நாங்க நினைச்சபடியே நடந்துடுச்சி”
”என்ன உளர்றீங்க”
”பின்ன என்ன அண்ணி, தாலியை கையில வைச்சிக்கிட்டு அண்ணா முன்னாடி நின்னு நியாயம் கேட்டா, அவர் பாவம் என்ன செய்வாரு, எப்பவோ அவர் உங்க கழுத்தில தாலி கட்டியிருப்பாருன்னு நினைச்சேன் ஆனா, பரவாயில்ல இப்பவாவது கட்டிட்டாரே“
”ஓஹோ உங்க அண்ணன் செய்த அநியாயத்தை நியாயமாக்க பார்க்கறீங்களா” என திட்ட அவர்களோ பயந்தார்கள்.
”சாரி அண்ணி அண்ணனுக்கு வேற வழி தெரியலை, அதனால இப்படி செய்துட்டாரு, அவரை மன்னிச்சி ஏத்துக்குங்க அண்ணி”
”அது என்னால முடியாது”
“இப்படி சொன்னா எப்படி அண்ணி”
”வேற என்ன செய்யனும்னு எதிர்பார்க்கறீங்க”