(Reading time: 33 - 65 minutes)

****சென்னை****

““ம்மா அம்மா ப்ளீஸ்மா.... 3 நாள் தாம்மா அதுவும் காலேஜ்ல arrange பண்ணின டூர் தானே எல்லாம் பாதுகாப்பா இருப்போம்மா ப்ளீஸ்ஸ்....”” என்று தன் தாயுடன் கைபேசியில் உரையாடிக்கொண்டு இருந்தாள் அனு.

““அதல்லாம் முடியாது அனு இப்போ ஊரே கெட்டுப்போய் கிடக்கு, நீ ஒன்னும் போக வேண்டாம்”” என்று கண்டிப்பாக கூறிக்கொண்டு இருந்தார் ஹேமா.

அவளது தோழிகள் அனைவரும் தங்கள் வீட்டில் அனுமதி வாங்கிவிட்டதால் அனுவை சுற்றி அமர்ந்து அவளது தாயின் பதிலுக்காக காத்திருந்தனர். ஹேமா வேண்டாம் என்று கூறவும் தான் மட்டும் போகாமல் எப்படி இருக்க முடியும் என்று வெறுப்பாக தோன்ற பதிலுக்கு அவரை கடிந்துகொண்டாள் அனு.

““இப்போ ஊட்டி போகாம பின்ன எப்போ போறதாம்?”” என்று சிறுபிள்ளை போல் அழுகையும் முட்ட அடக்கிக்கொண்டு பேசினாள்.

ஹேமாவோ, ““ஏன் இப்போ போனால் தானா கல்யாணத்துக்கு அப்பறம் உன் புருஷன்கூட சேர்ந்து போய்க்கோ அப்போ யாரு வேண்டாம்னு சொல்லுவா?””

““ஏம்மா இது உங்களுக்கே ஓவரா தெரியலை ஊட்டிக்கு போறதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?!”” என்று அவர் கூறிய பதிலுக்கு சிரிப்பை விட வெறுப்பு தான் அதிகமாக வந்தது அனுவிற்கு, ஆனால் சுற்றி இருந்த அவளது தோழிகளோ அவளது வாக்கியத்தில் சிரிப்புவர அனைவரும் சேர்ந்து சிரித்துகொண்டனர், கூட்டத்தில் ஒருத்தி, ““அவள் ஏன் ஆன்டி ஊட்டிக்கு போறாள் சொல்ல வேண்டியவங்ககிட்ட சொன்னால் அவளை வெளிநாட்டுகே கூட்டிட்டு போவாங்க”” என்று அவர்களுக்குள் மட்டும் கேட்கும் விதமாக கூறி மேலும் சிரித்தனர். தோழிகளின் கிண்டலில் சிரிப்பு வந்தாலும் அனுமதி வாங்கும் வேலையில் மும்பரமாக இருந்தாள்.

““நீங்க அப்பாகிட்ட குடுங்க அவங்ககிட்ட நான் permission வாங்கிக்குறேன்”” என்று வீராப்பாக வசனம் பேசினாள். கைபேசி தந்தையிடம் ஒரு முறைப்போடு போக அவரும் என்ன சமாளிப்பது என்று புரியாமலே வாங்கினார்.

““அப்பா.. பாருங்கப்பா ப்ளீஸ் விட சொல்லுங்க, நான் இந்த மாதிரி போறதே அதிசயம்”” என்று மகள் கெஞ்சல் குரலில் கேட்க அவர் உருகி போய் தன் மனைவியை பார்த்தார், வெங்கட் பார்க்கவும் வேறுபுறம் ஹேமா முகத்தை திருப்பிக்கொள்ள, ““கொஞ்சம் கஷ்டமான வேலையை தான் குடுத்துருக்க வாழு”” என்று தன் மகளிடம் கூறிவிட்டு அவரே ஐடியாவும் தந்தார், ரகசியமாக வேறுபுறம் திரும்பி, ““அனும்மா நீ கேட்டாள் கிடைக்காது உன் ஃப்ரிண்ட்ஸ பேச சொல்லு அப்போதான் உன் அம்மா இறங்கி வர சான்ஸ் உண்டு”” என்று போட்டுகொடுக்க அந்த வழிமுறையை பின்பற்றினாள்.     

ஒருவழியாக வெங்கட்டின் ஐடியாவில், அவளது தோழிகளும் சேர்ந்து கெஞ்ச ஹேமா பலமணி நேரம் அறிவுரை தந்த பின்பே அனுவை ஊட்டிக்கு செல்ல அனுமதித்தார். அனுமதி வாங்கிய குஷியில் துள்ளிகுதித்த அனு permission தந்த தாய்க்கு கைபேசியிலேயே முத்தமழை பொழிந்தாள். ஒருவழியாக கொஞ்சல் எல்லாம் முடிய, அதே உற்சாகத்துடன் அனைவரும் சேர்ந்து அமர்ந்து என்னவெல்லாம் லூட்டி அடிக்கலாம் என்று பிளான் போட்டுக்கொண்டனர், புகைப்படங்கள் எடுப்பது, ஷாப்பிங் செய்வது என்று பல ஐடியாக்கள் போட்டுக்கொண்டே தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டனர். முதல் முறை இப்படி ஒரு டூர் அதுவும் தோழர் தோழிகளுடன் செல்வது ஒருபுறம் பெரும் உற்சாகத்தைத் தர, ஊட்டியின் மலை பிரதேசங்கள், குளிர் காற்று என்று படத்தில் பார்த்தவை கேள்விப்பட்டவை எல்லாம் சேர்ந்து தனி உற்சாகத்தை தந்தது. மனம் சந்தோஷமாக பறக்க துணிகளுடன் சேர்த்து அவளது டைரியும் கணேஷும் packup ஆனார்கள்..

““பத்தரமா போயிட்டுவாபா, பணம் இருக்குள்ள? வேணும்னா கேளுப்பா அனுப்பிவைக்க சொல்றேன்”” என்ற அக்கறையாக கேட்டுக்கொண்டு இருந்தார் துளசி.

““அதெல்லாம் வேண்டாம்மா என்கிட்ட இருக்கு, நான் பாத்துக்குறேன்”” என்று அவனும் பொறுப்பாக பதில் கொடுத்துக்கொண்டு இருந்தான். துளசி பேசுவதை பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்த அஹல்யா இனிமேலும் தாங்க முடியாது என்று ““ஏன்மா அவன் என்ன வேற நாட்டுக்கா போகுறான், இங்க இருக்க ஊட்டிக்கு தானே அதுக்கு எதுக்கு இவ்வளவு feeling”” என்று கிண்டல் அடித்தபடி கைபேசியை வாங்கி பேச துவங்கினாள்.

““என்னடா தம்பி காதுல ரெத்தம் வருதாமே இப்போ பரவாலையா?”” என்று துளசியை சீன்டியவாறு அஸ்வதுடன் பேசினாள்.

அவளது பேச்சில் சிரிப்புவர அவள் போக்கிலேயே பேசினான், ““இவ்வளவு நேரம் காதுல தான் ரெத்தம் வந்துச்சு அக்கா இப்போதான் ரெத்த கண்ணீரே வர போகுதுன்னு நியூஸ்ல சொன்னாங்க”” என்று கூறி சிரித்தான். 

““போதுமே ஓவரா சிரிக்காத ஹ்ம்ம், திருமதி. துளசியை ஏதாவது சொன்னால் உனக்கு பொறுக்காதே”” என்று கூறி சிரித்துவிட்டு, ““என் பேச்சை கேட்க தவமாய் தவம் இருப்பாங்க தெரியுமா?!”” என்று சிலுப்பிக்கொண்டாள், அவள் எதார்த்தமாக சொல்ல அஸ்வத் பிடித்துக்கொண்டான்.

““எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு அக்கா, ஏதோ நடுக்குது...”” என்று பேச்சை இழுத்தவன் ““இப்போவெல்லாம் நீ போனை கீழ வைப்பதே இல்லையாம் நான் ஃபோன் பண்ணால் கூட முதலில் பிஸினு வந்து அதுக்கு அப்பறம் தான் எனக்கே கால் வருது”” என்று மெதுவாக இழுத்தான். அவன் கூறிய செய்தியின் பொருள் புரிய அச்சோ இவனுக்கு புரிஞ்சிருக்குமோ என்று வினாடியில் யோசித்து பேச்சை மாற்றினாள்.

““சரி சரி ஊட்டிக்கு போகிற, என்ன வாங்கிட்டு வர போற?”” என்று உரிமையாய் கேட்டாள்.

வள் பேச்சை மாற்றுகிறாள் என்று தெரிந்தும் பின்பு கேட்டுகொள்ளலாம் என்று எண்ணி, ““ம்ம்ம்ம்... காத்து வாங்கலாம்னு இருக்கேன்”” என்று நக்கலாக பதில் அளித்தான்.

““போடா மொக்கை”” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

““பின்ன நானாக வாங்கி வரணும் நீயா கேட்க கூடாது அக்கா, அப்படியே கேட்டாலும் நீ பெரிய லிஸ்ட் வச்சிருப்பியே அதான் கேட்கலை”” என்று கிண்டல் அடித்தான். இப்படியே சுவாரசியமாக சிறிது நேரம் பேசியவன், அழைப்பை வைத்தான். துணிகளை அடுக்கியவனுக்கு பின்புறம் அருண் மற்றவர்களுடன் பேசிக்கொண்டது கேட்டது, ““மச்சா குளிரான ஏரியா பீர் அடுச்சா நல்லா இருக்குமாம்டா ட்ரை பண்ணலாமா?!”” அருண் அண்ட் கோ இப்படி பிளான் போட்டுக்கொண்டு இருப்பதை பார்த்தவனுக்கு சிரிப்பாக இருந்தது.

““ஏன்டா நீ கெட்டு போறது பத்தாதுன்னு அவனையும் கெடுக்குரியா?”” என்று கிண்டலாக கேட்டான் அஸ்வத்.

““கெடுக்குறேனா??? வாயை கழுவுடா, ஒரு பையன் இப்படி ஒரு டயலாக் சொன்னால் ஊர் தாங்குமா ஹ்ம்ம்... இவன் தான் அதுக்கு சரிபட்டு வருவான். இல்லை கூப்பிட்டால்தான் நீ வர போறியா?”” என்று கேள்வியாக அவன் முடிக்க.

““யாரு நானா சான்ஸ இல்லை..”” என்று சிரித்துக்கொண்டே துணியை அடுக்கினான்.

““நீயெல்லாம் ஒரு பையனாடா ஒரு பீர் கூட அடிக்காம, ஹ்ம்ம் ஏதோ நல்ல புள்ளையை கெடுக்க வேண்டாமேன்னு பார்க்குறேன்”” என்று அவனை வித்தியாசமாக பார்த்தான்.

““உனக்கு அது புடிச்சிருக்கு அதை பண்ணுற..”” என்று அவன் முடித்தான்.

““உனக்கு என்னடா மச்சான் புடிக்கும்?”” என்று ஆர்வமாக கேட்டான்.

““எனக்கா...”” என்று கொஞ்சம் யோசிப்பது போல் இடைவெளி விட்டு தன் பையில் இருந்து உயர்ரக கேமரா ஒன்றை எடுத்தான். அதில் இருந்தே உனக்கு பீர் அடிக்க புடிக்கும், எனக்கு புகைப்படம் எடுக்க புடிக்கும் என்ற பொருள் உணர்த்தியது.

அவனது கேமராவை பார்த்து சிறிது வியந்தவன், ““இது எப்போதிருந்துடா?”” என்று கேட்டான்.

““இது என் பொழுதுபோக்குடா இந்த மாதிரி இடங்களுக்கு போகும் போது எடுத்துட்டு போவேன்”” என்று தான் முன்னால் எடுத்த சில புகைப்படங்களை காண்பித்தான். அதை பார்த்து சிறிது வியந்தவன் ““நீயெல்லாம்..... நல்லா வருவ மச்சான்”” என்று கூறி அஸ்வத்தின் தோளை தட்டிசென்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.