அன்றிரவு,
ஹாலில் சந்திர பிரகாஷும் சூர்யா பிரகாஷும் சுபத்ராவின் படிப்பை பற்றி விசாரித்து கொண்டிருந்தனர்...அதே நேரம் அபிராமி அழைத்திருந்ததால், ரகுவும் கிருஷ்ணனும் அவரின் அறை வாயிலில் நின்றிருந்தனர்..
" அண்ணா உள்ள போங்கண்ணா"
"டேய் நீ போடா ..உன் கிட்ட தானே அம்மா பேசணும்னு சொன்னாங்க "
" அண்ணா நான் கூட்டணியா போனாலே அம்மாகிட்ட மாட்டிக்குவேன் இதுல தனியா என்ன பேசுறது "
" என்கிட்ட அன்னைக்கு பக்கம் பக்கம் டைலாக் பேசுனியே அதை சொல்லு " (ஆமா ரகு சொல்லிடுங்க ... ஏற்கனவே போன எபிசொட் ல நான் மியுட்ல சீன் வெச்சிட்டென்னு பலபேரு கொலைவெறி ல இருக்காங்க ....அந்த சீன் கு இப்போ விளக்கம் கொடுத்து என்னை காப்பாத்துங்க )
" ம்ம்ம் பட் நீங்களும் வாங்க அண்ணா "
" எதுக்குடா "
" என்ன பேசுறேன்னு உங்களுக்கும் தெரியனும்ல "
" திடீர் திடீர்னு பொறுப்பா பேசுற அப்பறம் காமிடி பண்ணுற எப்படிடா? "
" நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இல்லையா ? அப்படிதான் ? "
அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல்,
" ஆமாடா இப்போ நாணயத்துக்கு எத்தனை பக்கம்னு ஆராய்ச்சி ரொம்ப முக்கியம் ...உள்ள வாங்கடா ... ரகசியம் பேசுறானுங்கலாம் ரகசியம் ! " என்று குரல் கொடுத்தார் அபிராமி ..
அசடு வழிய சிரித்தபடி கிருஷ்ணனும் ரகுவும் அவர் அறைக்கு வந்து அமர்ந்தனர் ...
" ஏன்டா இந்த வேண்டாத வேலையெல்லாம் ? பேச கூப்பிட்டா வரவேண்டியதுதானே? இதுக்கெலாம் நடுங்குங்க டா ...ஆனா லவ்வு பண்ண மட்டும் தைரியம் ஜாஸ்தி அப்படிதானே ? "
" அம்மா அது வந்து "
"கிருஷ்ணா நீ பேசாதே ..உன்னை எங்க கேள்வி கேக்கணுமோ அங்க கேக்குறேன் ..இபோ உன் தம்பிய ஒழுங்கா எனக்கு பதில் சொல்ல சொல்லு"
" அம்மா நீங்க நேரடிய என்னையே கேளுங்கம்மா ... அண்ணா கிட்ட ஏன் தூது விட்ரிங்க? "
" ஓஹோ அப்போ நீ மட்டும் எதுக்குடா உன் அண்ணாவை இங்க வர சொல்லி கெஞ்சிகிட்டு இருந்த? "
" அதுதான் விஷயமா ? அது சும்மா ஒரு மோரல் சப்போர்ட் ...சரி கேளுங்க மா ? "
" ரெண்டு வர்ஷம் முன்னாடி ஒரு எக்சிபிஷன் ல பார்த்தேன் நு சொல்லி போட்டோ காட்டுனியே அது இந்த ஜானகி தானே ? "
" ம்ம்ம் ஆமா அம்மா "
" அவள் பார்த்த அன்னைக்கே பிடிச்சு போச்சுன்னு அவளை போட்டோ எடுத்து என்கிட்ட காட்டினதுக்கு திட்டு வாங்குனியே .... நீ கூட அவளை தப்பான எண்ணத்துல பார்க்கல ....ஆனா அவளோட குழந்தைத்தனமும் அடுத்தவங்க நம்மளை என்ன நினைப்பங்கனு பயப்படாம அவளுக்கு புடிச்ச மாதிரி அவள் இருக்குறது புடிச்சிருக்குன்னு சொன்னியே? "
" ம்ம்ம்ம்ம் "
" அதுக்கப்பறம் நாந்தான் எதுவா இருந்தாலும் யோசிச்சு முடிவெடு அவளை பத்தி விசாரிக்கலாம்னு சொன்னேனே ? கொஞ்ச நாள் கழிச்சு அவளுக்கு நிச்சயம் ஆயிடுச்சுன்னு சொல்லி ஒரு பத்து நிமிஷம் தேவதாஸ் மாதிரி லுக் விட்டுடு அப்பறம் விடும்மா அந்த பொண்ணுக்கு கொடுத்து வைக்கலேன்னு சொன்னியே "
(ஹ்ம்ம்ம்ம் உண்மையில அவளுக்கு கொடுத்து தான் வைக்கலேம்மா )
" என்னாடா சைலெண்டா இருக்கே?அவ தானே ஜானு ? எப்போ ஜானுவை பார்த்த நீ ? அவளுக்கு கல்யாணம் ஆகலேன்னு சொன்னியே ? ஆனா அந்த பொண்ணு குங்குமம்லாம் வெச்சுகிட்டு...எனக்கு புரியல ? உன் மனசுல என்ன இருக்கு ? இப்போ உங்க ரெண்டு பேருக்கும் என்ன உறவு ? "
ஒரு பெருமூச்சுடன் நடந்தவற்றை சொன்ன ரகுராம் சில முக்கியாமான விவரங்களை மட்டும் சொல்லவில்லை ..அதை கிருஷ்ணன் கண்டுகொண்டாலும் ஏதும் கேள்வி கேட்கவில்லை .
" இப்போதைக்கு அவளை நான் என் தோழியா பார்க்குறேன் மா ... அவ மேல காதலே இல்லன்னு சொன்னா அது பொய் ...ஆனா அந்த காதல் விட ஜானகி சந்தோசம் எனக்கு முக்கியம் அம்மா... அவளை முழுசா மாற்ற முடிலன்னாலும் அட்லீஸ்ட் அவளை பழைய மாதிரி சிரிக்க வைக்கணும் ..அது போதும் ....அது மட்டும் இல்ல ............."
ஒரு நீண்ட மௌனத்திற்கு பிறகு
" இந்த ஜென்மத்துல அவதான் என் லைப் பார்ட்னெர் ...சப்போஸ் அவ எதுக்கலேன்னா நான் கடைசி வரை இப்படியேதான் இருப்பேன் "
" ரகு ......??"
" இதுல உன் வாழ்கையும் அடங்கி இருக்கு "
" அவ தான்மா என் வாழ்க்கை "
" ஆனா ஒரு பொண்ணு மனசு அவ்வளவு சீக்கிரம் மாறாது"
" தெரியும் அம்மா ...நான் வைட் பண்றேன் "
" ஆனா நான் அப்படியே வைட் பண்ண முடியுமா? நான் உன் அம்மாடா "
" எனக்கு புரியுதும்மா .... இப்போதைக்கு எனக்கு நீங்க சப்போர்ட் பண்ணுங்கம்மா ப்ளீஸ் "
" ம்ம்ம்ம் நான் கொஞ்சம் யோசிக்கணும் ரகு .... நீ இப்படி எனக்கு முக்கியமோ ஜானகியையும் நான் அப்படித்தானே பார்க்குறேன் "
" அப்போ அவளே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னா ? "
" சம்மதம் சொன்னா உடனே மிஸ் ஜானகியை மிசஸ் ரகுராம் ஆக்குறது என் பொறுப்பு "
" சூப்பர் மம்மி நீங்க ... ஜானுவோட பழைய லைப் பத்தி ??? "
" சுபாவுக்கு இந்த நிலைமை வந்தா நான் என்ன யோசிப்பேனோ அப்படித்தானே இப்பவும் யோசிக்கிறேன் "
" அம்மா அப்படியே அர்ஜுன் பத்தியும் "
" டேய் டேய் முதல்ல உன் கதைய முடிடா..அதுக்கு அப்பறம் அவங்களை பத்தி பேசலாம் ... எனக்கு அர்ஜுனை பிடிச்சிருக்கு .... சிவாவுக்கும் அவ தோழி கூட சம்பந்தம் வெச்சுக்க ஆசைதான் ...ஆனா எதையும் எடுத்தோம் கவிழ்தொம்னு செய்ய வேணாம்.... " என்றவர் கிருஷ்ணனை பார்த்தார் .
" கிருஷ்ணா "
" அம்மா "
" சொன்னது உனக்கும்தான் "
" ??? "
" நீ எதோ சோகமா இருக்கேன்னு தெரியும்... ரகுவுக்கு கொடுத்த நேரம்தான் உனக்கும் ... உன் பிரச்சனைய நீ சரி பண்ணு இல்லன்னா நான் தலையிட வேண்டிய அவசியம் வரலாம் ...எப்பவும் உன் முடிவு மேல எல்லாருக்கும் நம்பிக்கை இருக்கும் ...அதை காப்பாத்திக்க "
" ம்ம்ம்ம் சரி மா "
" சரி போய் தூங்குங்க ..குட் நைட் "
" குட் நைட்"