(Reading time: 7 - 14 minutes)

 

ன்றைய பொழுது அனைவர்க்கும் ஓரளவு நன்றாகவே விடிந்தது என்றால் ஐந்து பேருக்கு மிகவும் அருமையானதாக இருந்தது,

அதுல பர்ஸ்ட் யாருன்னு பாப்போம் வாங்க,

துள்ளலுடன் எழுந்த ரகு, நேரே தன் தந்தையின் புகைப்படத்தின் முன் நின்று மனம் விட்டு பேசினான். தினமும் செய்வது தான் என்றாலும் சில முடிவுகளை அவன் நேற்றைய இரவு எடுத்ததால் அதற்கு துணை இருக்குமாறு கேட்டு கொண்டான். பின் தன் அன்றாட பணிகளை கவனிக்க சென்று விட்டான்..

ங்கேயோ குயில் ஒன்று கூவி கொண்டிருக்க, வெகு நாட்களுக்கு பிறகு அன்னையின் நளபாகம் தந்த மணம் நாசியில் ஏற மலர்ந்த புன்னகையுடன் எழுந்தான் ஆதி. நேரே கிட்சனிர்க்கு சென்றான்,

"குட் மார்னிங் மம்ஸ்"

"டேய் அம்மான்னு அழகா கூப்பிடுன்னு சொல்லிருகேன்ல"

"போ மம்ஸ் செல்லம் கொஞ்ச கூட விட மாட்டேன்குற, எவ்ளோ நாள் உன் புள்ள உன்ன பாக்காம இருந்துட்டு வந்துருக்கான்"

"ஆமா டா இப்போ நல்ல வசனம் எல்லாம் பேசு, இங்க வாட வாடான்னு நான் கூபிடப்போ எல்லாம் அங்க வர பிடிக்கல வேலை அது இதுன்னு சாக்கு சொல்லிட்டு"

மனதில் நேற்றைய இரவின் எண்ணங்கள் தோன்ற அன்னையை பின்னிருந்து கட்டி கொண்டு

"சாரி மம்ஸ் இனி இங்கயே தான் இருப்பேன், எங்கயும் போக மாட்டேன்"

"ம்ம்ம் சரி சரி பொய் குளிச்சுட்டு வா போ"

"வாட்?! பெட் காபி குடிக்கமா குளிக்கனுமா? அதும் என் அம்மா கையால காபி குடிச்சு எவ்வ்வ்வ்வ்வளவு  நாள் ஆச்சு"

"உதை வாங்குவ ராஸ்கல், ஒழுங்கா போய் குளிச்சுட்டு வந்த தான் எல்லாமே கிடைக்கும் இல்லன்ன தண்ணி கூட இல்ல" என்று பொய்யாக முகத்தை கோபம் போல் வைத்து கொண்டு ரஞ்சனி சொல்ல அதை ரசித்தவன்,

"யூ ஆர் டூ பேட் ரஞ்சி " என்று அவன் சிணுங்கி விட்டு செல்ல,

"அடி கழுதை" என்றவர் அவன் இன்னும் சிறு பிள்ளையாய் இருப்பதை பார்த்து சிரித்து கொண்டு நின்றார். 

சாரி பிரெண்ட்ஸ் கம்ப்யூட்டர் ப்ரோப்ளம் நாலா நான் முதலில் எழுதிய அத்தியாயம் தொலைஞ்சு போயிருச்சு :( உங்க எல்லாரையும் ஏமாத்துனதுக்கு ரொம்ப சாரி... கடைசி நேரத்தில் இதை தான் என்னால மறுபடியும் எழுத முடிஞ்சுது... நீங்க எதிர் பார்த்த தீபாவளி கிப்ட் உங்களுக்கு அடுத்த எபிசோட்ல தரேன்…. என்மேல கோபம் வேண்டாம் ப்ளீஸ்….

காதல் பெருகும்… 

Episode # 08

Episode # 10


{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.