வேறென்ன வேணும் நீ போதுமே – 18 - புவனேஸ்வரி கலைச்செல்வி
வெண்ணிலவு ..!
காரிருள் மெத்தையில் உறங்கும் குட்டி தேவதை ...
பூத்திருக்கும் நட்ச்சத்திரங்கள் நடுவில் காய்த்திருக்கும் வெள்ளை மாங்கனி ...
அந்த ரம்யமான இரவிற்கு மேலும் அழகு சேர்த்தது பால்நிலா... நிலவின் ஒளியில் மயங்கி மதுவுண்ட வண்டுகளாய் அமர்ந்திருந்தனர் நம் கதாநாயகர்களும் நாயகிகளும் ....
" என்னதான் சொல்லுங்க .... ராத்திரில மொட்டைமாடியில உட்கார்ந்து இருக்குற சுகமே தனி " என்று ரசித்து சொன்னாள் மீரா...
குளிர் காற்றை எதிர்கொள்ள முடியாமல் கைகளை கட்டிக்கொண்ட ஜானகி, " சரியா சொன்னிங்க அக்கா " என்றாள்....
கிருஷ்ணனோ யாருக்கும் கேட்காத குரலில் " அதைவிட உன் பக்கத்துல உட்கார்ந்து இப்படி திருட்டுத்தனமா கை பிடிச்சிட்டு நிற்கிறது இன்னும் சுகம் மீரூ " என்றான்..
" என்ன சொன்ன கிருஷ்? எனக்கு சரியா கேக்கலையே ?!" என்று அர்ஜுனன் ஒட்டுகேட்பதுபோல பாவனை செய்ய
" மச்சான் ஆளை விடுடா " என்று கை கூப்பினான் கிருஷ்ணன் ....
" ஹா ஹா கூல் ... ஆமா ரகு நீ ஏன் சைலெண்ட்டா இருக்க ? " என்று அர்ஜுனன் கேட்க,
" ஜானகி பக்கத்துல இருக்கும்போது ரகுராமுக்கு எப்படி பேச்சு வரும் அர்ஜுன் " என்று வாரினான் கார்த்தி .....
" சரியாய் சொன்ன கார்த்தி .. சரியான ஜொள்ளு " என்று நித்யாவும் அவனுடன் இணைய
" யாரு நாங்க ஜொள்ளா ? மேடம் நீங்கதான் உங்க ஹீரோவை உரசிகிட்டு நின்னுட்டு இருக்கீங்க " என்றான் ரகுராம் ..
அப்போதுதான் அங்கு வந்த சுபத்ரா " ஹே என்ன எல்லாரும் வெட்டியா கதை பேசிட்டு இருக்கீங்க போல ... ? நம்ம கதையில எல்லா கேரக்டர்சும் மீட் பண்ணா பாட்டு பாடணுமே ..அதானே முறை ? " என்றாள்....
" ஹ்ம்ம்ம்ம் ஆமா சுபத்ரா ... பட் நிறைய பிளாஷ்பேக் சீன் பெண்டிங் ல இருக்காம் சோ இன்னைக்கு ஆளாளுக்கு 'குற்றம் நடந்தது என்ன ? " ரேஞ்சுக்கு கதை சொல்லனுமாம்" சோகமாய் சொன்னான் சிவகர்த்திகேயன் ...
" நம்ம கதையை சொல்றதுல உனகென்னடா சோகம் ? "
" ஐயோ நித்தி செல்லம் ...நோ கோவம் ... நான் சும்மாதான் சோகமா இருந்தேன் "
" கதையா அப்போ எங்களுக்கும் சொல்லுங்க " என்று கூறிய அந்த இருவரையும் அனைவரும் விழிவிரிய பார்த்தனர்... அவங்க ரெண்டு பேரு யாருன்னு அடுத்த எபிசொட் ல சொல்றேன் .. அப்படின்னு நான் சொன்னா நீங்க எல்லாரும் கொலைவெறி ஆகிடுவிங்க என்பதினால் .., இப்போவே சொல்லிடுறேன் .. ஹீ ஹீ
அவங்க ரெண்டு பெரும் வேற யாரும் இல்ல... புதுசா கல்யாணம் ஆன நம்ம ஆகாஷ்- சுப்ரியாதான் ....
இவங்களுக்காக தமிழ் படத்துல காட்டுற மாதிரி ரன்னிங், சேசிங், ரேசிங், ஷூட்டிங் நு இல்லை என்றாலும் கூட கொஞ்சம் ஓடி ஆடி கஷ்டபட்டு ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம கதை கேட்க இங்க வந்து நின்னுகிட்டு இருக்காங்களே.... என்ன கொடுமை சரவணன் ???
" டேய் நீங்க இங்க என்னடா பண்ணுறிங்க ? "
" கூல் கிருஷ்ணா ... சும்மா உங்க கூடலாம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னுதான் வந்தோம் " என்றவன் காதலுடன் சுப்ரியாவின் கரங்களை பற்றிகொண்டான் ...
" இடியட் .. இதை நீ முன்னாடியே சொல்லி இருந்தா உன் ரூம் எல்லாம் நான் டெகரெட் பண்ணிருக்க மாட்டேன் ல ... வீணா என்னை வேலை வாங்குறதே உனக்கு வேலையா போச்சு " என்றபடி அவனின் முதுகில் இரண்டடி போட்டாள் நித்யா ...
" அச்சோ நித்து ... அடிக்காதிங்க அவர் பாவம் "
" அண்ணி நீங்க சும்மா இருங்க "
" அச்சோ இல்லம்மா ...நான்தான் நீங்க எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து இருக்கறதை பார்த்துட்டு இங்க வரலாம்னு சொன்னேன் "
ஆண்கள் அனைவரும் ஆகாஷை பாவமாக பார்க்க, ஆகாஷோ " வாட் டு டூ ? " என்று பாவமாய் பார்த்தான் ...
" நல்ல பொண்ணு மா நீ.. பாவம் ஆகாஷ் " என்று வாய் விட்டே சொன்னான் அர்ஜுனன்...
" ஐயோ அப்படி எல்லாம் இல்ல அண்ணா... இன்னும் ரெண்டு மூணு நாளுல நீங்கலாம் கிளம்பினதும் நாங்க தனியத்தானே இருக்கப்போறோம் ? அப்பறம் என்ன ? "
" ஷாபா போதும் போதும் உங்க பாசமலர் படம் " என்று சுபத்ராவும் நித்யாவும் ஒரே நேரத்தில் பேசி ஹை 5 கொடுத்து கொண்டனர் ...
" சரியான வாலு " என்று கார்த்தியும் அர்ஜுனும் ஒரே நேரத்தில் சொல்லி தங்கள் காதல் குயில்களை போலவே ஹை 5 கொடுத்து கொண்டு சிரித்தனர்.
" ஓகே ஓகே அப்போ நேரம் தாழ்த்தாமல் பிளாஷ்பேக் சொல்லுங்க " என்று ஆர்வமாய் கண்சிமிட்டினாள் மீரா ... பின்ன , தன் ஆருயிர் தோழி நித்யாவுக்கு கூட காதல் மலர்ந்திருக்கே, அதை பத்தி தெரிஞ்சுக்காம இருக்க முடியுமா ?
" அப்படின்னா அர்ஜுன் அண்ணா முதலில் நீங்க சொல்லுங்க "
என்றாள் சுப்ரியா ..
" என்ன சொல்ல தங்கச்சி ? "
" அம்மா அப்பா மனசை எப்படி மாத்துநிங்க ? இன்னைக்கு காலையில் அவங்க வந்து நின்னதும் எனக்கு எதுவுமே புரியலை ... எங்க என்னை ஆகாஷ் கிட்ட இருந்து பிரிக்க வந்துட்டாங்களோன்னு பயந்துட்டேன்... பட் நிலைமை அப்படியே தலைகீழா மாறிடுச்சே ... எனக்கு தெரியும் அன்னைக்கு உங்க கிட்ட பேசின பிறகுதான் இந்த மாற்றம் எல்லாம்னு ... அன்னைக்கு அப்பாவை பார்க்க்க போறேன்னு சொல்லிட்டு போனிங்களே அப்போ என்ன நடந்துச்சு ? "
அன்று என்ன நடந்ததென்று சுபத்ராவுக்கு மட்டும் தெரியும் .... அவளும் ஒரு புன்னகையுடன் " சொல்லுங்க அஜ்ஜு" என்றாள்.... அவளை பார்த்து கண்சிமிட்டியவன்,
" சொல்றேன் மா.. சொல்றேன் ... அர்ஜுனன் உண்மைய சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தாச்சு " என்று நாடக பாணியில் பேசிவிட்டு அன்று நிகழ்ந்ததை சொல்ல தொடங்கினான் ... எல்லாரும் அப்படியே மேல பாருங்க .........
சுபத்ராவின் உடல்நிலை சரியானதும் நம்ம கிருஷ்ணாவின் பேச்சிற்கு மறுப்பேதும் கூறாமல் இளவரசியுடன் ஆகாஷின் வீட்டிற்கு விஜயம் தந்தார் நம்ம யுவராஜன் அர்ஜுனன் ... இயல்பாகவே அர்ஜுன்- சுபத்ரா இருவருமே ரொம்ப கலகலப்பான குணாதிசயம் உள்ளவர்கள் என்பதால் நாம சுப்ரியா- ஆகாஷ் இருவரிடமும் அவர்கள் நட்பு பாராட்டியதில் ஆச்சர்யமே இல்லையே ..
அதிலும் நம்ம அர்ஜுனன், சுப்ரியா உளமார ' அண்ணா ' என்று அழைக்கும் அளவிற்கு அவள் மனதில் அன்பை வார்த்து அழகிய உறவு பாலத்தை உருவாக்கி இருந்தார்... இப்படியாய் அன்று,
" ப்ரியா ... நான் உன்னை உன் வெளி தோற்றத்துக்காக மட்டும்தான் விரும்புறேன்னு நினைக்கிறியாடா ? "
" ஆகாஷ்??? "
" பின்ன என்ன பேபி ? உன் உணர்வுகளுக்கு நான் கொடுக்குற மதிப்பு உனக்கு புரியலையா ? "
" நான் அப்படி சொல்லலியே ஆகாஷ் ?"
" அப்பறம் நீ இப்படி அழுதுட்டு இருந்தா என்னால எப்படி நம்ம கல்யாணத்தை பத்தி யோசிக்க முடியும் ? முடிவெடுக்க முடியும் ? "