சுகா.......!!! அவன் அலறலாய் இவளை அழைப்பது கேட்டது. காரிலிருந்து இறங்கிவிட்டான் போலும். இவளும் ஸ்கூட்டியை நிறுத்தி இருக்கிறாள் என்பதே இப்போதுதான் உறைத்தது.
நரக இருள்.
குரல் வந்த திசையை குறிவைத்து பாய்ந்தாள். ‘ஜீசஸ் மஹிய காப்பாத்துங்க ப்ளீஸ்!!’
இரெண்டெட்டில் அவனிடம் சிக்கினாள். அவனும் இவளை நோக்கி ஓடி வந்திருக்கிறான்.
ஆனால்.....அந்த உருவமும் இவர்களுக்கு அடுத்ததாய் தோன்றி இருந்தது.
மஹிபனை மறைத்தபடி நின்றாள் அவள்.
அவள் கழுத்தை நோக்கி நொடிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் நீண்டது அதன் கை. இவளை பார்த்து அது பயபடவில்லை ஏன்? இப்போது என்ன செய்யவேண்டும்? மீண்டும் மரணிக்கும் நேரமா இது?
பளிச்சென்று ஒரு மின்னல். வந்த மின்னல் மறையாமல் நிலைத்தது. அது மின்னல்ல என்பது அதன் பின்புதான் புரிந்தது.
மின்னல் நிற முழுமனிதன்.
முடி முதல் அடி வரை மின்னல் வண்ணன்.
மழைகுரலில் பேசினான்.
“காலங்களுக்கு முந்தியவரை கண்டு வந்ததால் மட்டுமே இத் தீங்கு உன்னை தொடாது என எண்ணாதே!! இதை கையாள கற்றுதர உத்தரவு பெற்று வந்தேன்.”
சொன்ன அத்தேவ தூதன் அவள் அருகிலிருந்த ஒரு வெண்ணிற சட்டத்தை எடுத்தான். அது ஏதோ சன்னலின் கம்பி சட்டம் போலிருந்தது. அவளருகில் அது இருந்தது அதுவரை அவளுக்கு தெரியவே இல்லை.
அச்சட்டத்தை அவன் அந்நிழல் மனிதனை பார்த்து நீட்ட அது சங்கிலியாய் மாறி அவனை பிணைத்தது. அவ்வுருவம் கட்டபட்டு சாலை ஓரத்தில் போய் விழுந்து சுருண்டு, சுருங்கி மறைந்து போனது.
அடுத்த கணம் தூதனும் பார்வைக்கு படவில்லை. ஆனாலும் இருள் இல்லை. சாலையில் வெளிச்ச கற்றை. உபயம் இருவரது வாகன விளக்குகளும்.
தொடரும்
{kunena_discuss:762}