16. காதல் நதி என வந்தாய் - வினோதா
பிரியாவினுள் என்ன உணர்வு தோன்றியதோ, விக்கிராந்திற்கு சிலிர்த்தது.
தன் வருங்கால மனைவி பார்த்த அந்த ஒரு நொடிக்கும் குறைவான பார்வை மனதை மயக்க, புன்னகையுடன் நின்றான் அவன்.
"பிரியா, லீவ் போட்டுடு, இன்னும் மூணு நாலு வொர்கிங் டே தானே இருக்கு, நீ வெயில்ல அலைய வேண்டாம்..."
"இல்லை அத்தை..." என்று பிரியா தயக்கத்துடன் தொடங்கவும்,
"பிரியா, பெரியவங்க சொன்னால் கேட்கணும்..." என்று இடைமறித்து கூறினாள் வைஜெயந்தி.
"இருங்க அக்கா, அவள் சொல்லட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
மாம் உங்க மருமகள் எங்கே?"
"ஹ்ம்ம்...."
"சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன் மம்ஸ்"
"வர்ஷாவோட பேசிட்டு இருக்கா"
"எப்படி என் சாயிஸ் உங்க எல்லோரையும் அசத்திருச்சு தானே?"
"யாரு பிரியா உன் சாயிஸ்??? போடா..." என்றபடி திரும்பிய ராஜமை தடுத்து நிறுத்தினான் விக்கிராந்த்.