(Reading time: 23 - 45 minutes)

போனை கையில் வாங்கியவள்... டிஸ்ப்ளேயரை பார்த்தாள்... 'Saravanan USA calling' என்றது.

ஹலோ...

ஹலோ பூங்குழலீ நான் சரவணன் பேசறேன்.

ஆங்.. சொல்லுங்க...

குழலீ நான் சரவணன் அண்ணா பேசறேன்.

சொல்லுங்க. லைன்ல தான் இருக்கேன்.

நான் அண்ணா குழலீ.. சரவணனா...

….....

ம்ம்ம்... எப்படி இருக்க பூங்குழலீ?? என்னை ஒரு முறை மறுபடியும் அண்ணானு கூப்பிட மாட்டியா???

அதற்கு என் அப்பா மறுபடியும் உங்க அப்பாகூட ஒரே தாய்க்கு மகன்களா பிறக்கனும்!

அப்போ இந்த ஜன்மத்தில கிடையாதுனு சொல்லற???

......

குழலீ...

….....

இருக்கியா???

சரி...சொல்லுங்க னா பூங்குழலீ லைன்ல தான் இருக்கிறேன்...

அப்பா போன் பண்ணார் போல் நீ எடுக்கலியாமே???

ஆமாம்.

ஏன்??

....

அந்த ஈரோடு மாப்பிள்ளைய வேண்டாம்னு சொல்லிட்டியாமே?? ஏன் மா???

பிடிக்கல..

ஏன்?? பையன் ரொம்ப நல்லமாதிரி மா.. ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது... நல்ல சம்பளம் நல்ல வேலை நல்ல குடும்பம்.. என்ன தப்பா பட்டுச்சு உனக்கு??

நீங்க தானே அந்த பையனை பத்தி விசாரிச்சது??

ஆமாம்.. ஏன்..?

அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா இல்ல வேற லவ் ஹவேர் இருக்கானு பார்த்தீங்களா??

பார்த்தேனே.. அப்படி எதும் இல்லியே...குழலீ.. ஆனந்தன் அப்படிபட்ட பையன் இல்லமா..

இருக்கே... உங்க ஆனந்தன் கூட வேலை பார்க்கற பெண்னண லவ் பண்ணறான். அந்த பெண்ணும்தான்.. இரண்டு பேரும் ரிங்க் கூட மாத்திட்டாங்க. இப்போ இருவருக்கும் சண்டை.. ஆனா கல்யாணம் மட்டும் வேற ஒருத்தியோட இல்ல ???

குழலீ???!

என்ன?? எதனால சண்ட னு கூட தெரியும் னா. இப்போ போய் திரும்ப விசாரிச்சிட்டு உங்க அப்பாகிட்ட சொல்லுங்க. என்ன சொல்ரார்னு பாருங்க..

அதையும் நானே சொல்லறேன் 'இப்போ என்ன அந்த பையன் லவ் தானே பண்ணறான்... இவளை கல்யாணம் பண்ணா இவ தான் முதல் மனைவி இரண்டாவதா லவர் இருந்தா இவளுக்கென்ன?? கல்யாணமானா பத்தாதா ஒரு குழந்தையும் பிறந்தா முழு உரிமையும் இவளுக்குதான் அப்புறம் என்ன.. எவனோ லவ் பண்றானா இவ கஷ்டபடறாளாம்!!!' இத தான் சொல்லுவார்.

குழலீ...

இருங்கனா.. நான் பேசி முடிக்கல. நான் சொன்னது உண்மைனு தெரிஞ்சி அதை உங்க அப்பாகிட்ட சொல்லி, அவர் நான் சொன்னதையே சொன்னாலும் அதை சரினு கேட்டு மண்டைய மட்டும் ஆட்டாதிங்க.. ப்ளிஸ். நான் ஒன்னு கேட்கிறேன் நீங்க தப்பா எடுத்துக்கிடாலும் பரவாயில்லை. உங்களுக்கு மட்டும் நீங்க லவ் பண்ணவங்களையே கல்யாணம் செய்து வைத்தாறே மற்றவங்க பிள்ளைங்கனா மாட்டாரா??ஊரான் பிள்ளை எப்படி போனாலும் பரவாயில்லை இல்ல... அது சொந்த தம்பி மகளாயிருந்தாலும் இல்ல நண்பரின் மகனாய் இருந்தாலும் இல்ல.. தன் பிள்ளை மட்டும் நல்லா இருக்கனும். என்ன எண்ணம் இது??

குழலீ.. ஆனந்தன் அப்படிபட்ட பையன் இல்லமா..

சரி... விசாரிச்சிட்டு உங்க அப்பா பதிலையும் கேட்டுட்டு திரும்பவும் கால் பண்ணுங்க.. அப்ப நான் பதில் சொல்லறேன்..'

த்து நிமிடத்தில் மறுபடியும் கால்...

'சொல்லுங்க..னா'

அப்பாகிட்ட நீ சொன்னதை பத்தி பேசினேன்..

என்ன சொன்னார்???

....

சொல்லுங்க...

நீ சொன்ன வார்த்தைகள் தான். இன்னும் கொஞ்சம். அதிகமாகவே பேசினார்.

என்ன... பேசினார்?

உனக்கு எப்படி தெரியும்னு கேட்கரார். இன்னும் பேசினார்...

என்ன சொல்லிருப்பார்... இவ போய் விசாரிச்சாலாமா?? திமிரு... பாரு அவ அம்மா எப்படி வளர்த்து வெச்சிருக்கா...இத கேட்டு இவ ரிஜக்ட் பண்றாளாமா...'

அதுக்கும் மேலியே பேசினார் குழலீ.

சரி பேசட்டும் ஐ டோண்ட் கேர்!' என்று கட் செய்தாள்.

குழலீமா... கொஞ்சம் அமைதியா....

இல்ல டேவிட் அண்ணா... இவர் எவ்வளவு பேசுரார் நாங்க திருப்பி பேசினா தப்பா... எங்க அப்பாவ பத்தி தப்பா பேச என்ன ரைட்ஸ் இருக்கு இவருக்கு கூட பிறந்தா மட்டும் போதுமா. இறந்து போனவங்கள பத்தி தவறா பேசக்கூடாது னா.. இந்த ஐஞ்சி வருசமா எப்படி இருக்கனுக்கூட கேட்டதில்ல... இப்பக்கூட கேட்கல அண்ணா... எதாவது உதவி வேணுமானு கூட கேட்டதில்ல.. நானும் அத எதிர்பாக்கலை.. சின்ன வயசிலேயிருந்து இவங்ககிட்ட எவ்வளவு அடி.. யாரோ ஒருவனை பிடிச்சு கல்யாணம் செய்து வைக்கனும். பாரு என் தம்பி பொறுப்பையும் நான் தான் செய்யறேனு ஊருக்கு சொல்லனும். நான் சந்தோஷமா இல்லனாலும் பரவாயில்லை. அது தான் அவங்களுக்கு வேணும். கடந்த இரண்டு வருடமா எங்க அம்மா வரன் தேடறாங்க.. ஏதேதோ காரணங்களால் ரிஜக்ட் செய்யபட்டேன். கடைசிய பொன்னு அழகாயில்லைனு சொல்லி.. ச்சச.. ஆனா நான் மட்டும் ஒரு சரியான குற்றத்தை பார்த்து ரிஜக்ட் செய்தா தப்பு... பசங்க செய்தா தப்புயில்லை... பெண்கள் செய்தால் தவறா?? என்ன நியாயம் இது..

தவறு யார் செய்தாலும் தவறுதான் குழலீமா. அதுக்கு நீ ரிஜக்ட் பண்ணது தப்புனு சொல்ல வரலை.. மறுபடியும் கேட்கிறேன், இப்போ என்ன பிரச்சனை னு சொல்லு... அவர் பேசியதா.... இல்லை அந்த பையனா...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.