(Reading time: 18 - 36 minutes)

டேய்… நீ எங்க இருக்குறடா?...

வந்துட்டே இருக்கேண்டா துணா… ஏண்டா இவ்வளவு அவசரப்படுற?

அவசரம் தான்… நீ சீக்கிரம் வா…

உள்ளே வந்துட்டேண்டா…

டேய்… நிஜமாவா?... இதோ வரேன் நானும்… என்று பேசி போனை வைத்துவிட்ட வ்ருதுணன் அவசரம் அவசரமாக வாசலுக்கு ஓடினான்…

அங்கே ஒரு புதியவன், கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான்… வ்ருதுணனைக் கண்டதும், அவன் இதழ்களில் கீற்றுப்புன்னகை விரிந்தது…

அதற்கும் மேல் தாமதிக்காமல் வ்ருதுணன் ஓடி போய் அவனைக் கட்டிக்கொண்டான்…

யுவி… எப்படிடா இருக்குற?... பார்த்து எத்தனை வருஷமாச்சு?... என்றபடி அவனை விட்டு விலகாமல் நின்றிருந்தான் வ்ருதுணன்…

என்னடா பண்ணுறது?... வேலை கொஞ்சம் அதிகம்… அதான் வர முடியலை… என்றான் யுவியும்…

போடா… இதையேதான் சொல்லுற எப்போ போன் பேசினாலும்… இந்த பொய்யை வீட்டுல வேணா நம்புவாங்க… நான் நம்ப மாட்டேன்பா… என்றான் வ்ருதுணன்…

ஹ்ம்ம்… சரி… என்ற யுவியும், எதுக்குடா என்னை வீட்டுக்கு கூட போகவிடாம நேரா ஏர்போர்ட்டுல இருந்து இங்கே வர சொன்ன?... என்று கேட்க…

ஹ்ம்ம்… போனில் உங்கிட்ட சொன்னேன்ல… என்று சற்றே துணா வெட்கம் கொள்ளவும்,

ஓ.. சரி சரி… புரியுதுடா… என்றான் யுவியும் சின்ன சிரிப்புடன்…

ஹ்ம்ம்… வாடா… காட்டுறேன்…. என்ற துணா, யுவியை இழுத்துக்கொண்டு சென்றான்…

துணா, நேராக யுவியை வள்ளி, பாலா, மஞ்சரி மற்றும் இன்னும் சில பெண்கள் வேலை செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு சற்றே தொலைவில் அழைத்து வந்திருந்தான்…

ஹ்ம்ம்… அங்கே இருக்காங்கல்ல… அதுல தான் என்னோட காதலியும், நம்ம மையனோட காதலியும் இருக்குறாங்க… ஹ்ம்ம்… அது யாருன்னு கரெக்டா சொல்லு பார்ப்போம்… என்று வ்ருதுணன் யுவிக்கு பரீட்சை வைக்க…

யுவியின் பார்வை அவன் கைகாட்டிய திசையில் உள்ள பெண்களின் பக்கம் சென்றது…

ஒரு சில நிமிடத்திற்குப் பிறகு, யுவி சரியாக சொல்லிவிட,

டேய்… சூப்பர்டா… கரெக்டா சொல்லிட்ட… என்று குதூகலித்த துணா, சரி வா… என்று யுவியை அவர்களிடத்தில் அழைத்துச் சென்றான்…

வள்ளியின் அருகே வந்த துணா, வள்ளி, ஒருநிமிஷம் என்று சொல்ல, அவள் என்ன சொல்லுங்க என்ற பாவனையில் நிமிர்ந்து பார்த்தாள்…

பாலா, மஞ்சரி கொஞ்சம் இங்கே வரீங்களா என்று துணா சொல்ல, அவர்களும் எழுந்து வள்ளியின் அருகே வந்தனர்…

இவன் பேரு யுவி… இத்தனை நாள் வெளிநாட்டுல இருந்தான்… இன்னைக்கு தான் வந்தான்… இனி நம்ம கம்பெனியில் இவனும் எம்டி தான்… என்று தனக்கு பின்னால் இருந்த யுவியை முன் நிறுத்தி மூவரிடமும் சொல்லியவன்,

யுவி… இவங்க பாலா… இவங்க மஞ்சரி… என்று வரிசையாக அறிமுகப்படுத்தி வைத்தான்…

அவர்களும் மரியாதை நிமித்தமாக ஹலோ சொல்ல…

துணா, யுவியிடம், யுவி… இவ வள்ளி… என் செல்ல தங்கை… என்று அறிமுகப்படுத்தி வைக்க, யுவியின் பார்வையும், வள்ளியின் பார்வையும் ஒருங்கே சந்தித்துக்கொண்டது…

பின்னர், சரி வள்ளி, நான் அப்புறம் பேசுறேன் உங்கிட்ட… என்ற துணா, யுவியை அழைத்துக்கொண்டு செல்ல… மஞ்சரியோ, சிரித்தவண்ணம் வள்ளியைப் பார்க்க…. வள்ளியும் பதிலுக்கு சிரித்துவிட்டு அவள் வேலையைப் பார்க்க சென்றுவிட,

பாலா எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாதவாறு நின்று கொண்டிருந்தாள்…

ஹேய்… பாலா… அவங்க போயிட்டாங்கடி… இன்னும் எதுக்கு நின்னுட்டிருக்குற?... வா வந்து வேலையைப் பாரு… என்ற மஞ்சுவிற்கு பாலாவிற்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் தேவைதான் என்றிருந்தது…

இருந்தாலும் பாலாவின் நடவடிக்கைகளை அவள் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்…

பாலாவின் மனது ஒருநிலையில் இல்லாமல் அங்கும் இங்கும் உழன்று கொண்டிருந்தது…

நடப்பதெல்லாம் பொய் இல்லை என்ற உண்மை அவளுக்கு விளங்கியது…

மனதில் குழப்பங்கள் தலை தூக்கினாலும், மனம் ஒருபக்கம் உவகை கொள்வதையும் அவளால் தவிர்க்கமுடியவில்லை…

அதன் காரணம் என்ன என்று அவள் அறியமுற்பட்ட போது அவளுக்கு கிடைத்த பதிலில் அவள் சற்றே அதிர்ச்சியில் உறைந்தாள்...

எனினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாயிருந்தாள்…

ஆனால், அவளையே வைத்த கண் வாங்காமல் கவனித்துக்கொண்டிருந்த மஞ்சரியின் கவனத்தில் பாலாவின் தடுமாற்றம், அதிர்ச்சி, கவலை, சந்தோஷம், என அனைத்து உணர்ச்சிகளும் பதிந்ததை பாவம் பாலாதான் அறிந்திருக்கவில்லை…

வள்ளியோ தன் இடத்தில் அமர்ந்ததும், அவள் அணிந்து கொண்டிருந்த சிரிப்பு முகமூடியை கழற்றிவிட்டு, யோசிக்கலானாள்…

இத்தனை நாள் எது நடக்கக்கூடாது என்று எண்ணினாளோ, அது அனைத்திற்கும் சேர்த்து இன்று நடந்துவிட்டது போன்ற உணர்வையும் அவளால் தடுக்கமுடியவில்லை…

மேலும் அவள் மனம் லேசாக குழப்பத்திற்கும் ஆளானது…

அதே நேரம் வ்ருதுணனின் அறையில்,

யுவியும், துணாவும் பேசிக்கொண்டிருக்கையில்,

டேய்… துணா… உன் கூட வந்த பிரெண்ட்… ரொம்ப ஹேண்சமா இருக்குறாங்கன்னு ஆஃபீஸ் முழுக்க பேச்சா இருக்கு… அது யாருடா… எனக்கு தெரியாத பிரெண்ட் என்று சட்டென்று அறையினுள் நுழைந்த விழியன் கேட்க…

விழியனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த யுவியைக் கைகாட்டிய துணா,

எல்லாம் உனக்கு வேண்டப்பட்டவர்தான்… நீயே இங்கே வந்து பாரு… என அருகில் அழைக்க…

எனக்கு வேண்டியவரா?... அது யாரு… என்ற யோசனையுடன் துணாவின் அருகே சென்ற விழியன்,

ஹை… யுவி……. என்ற கூச்சலுடன், அவன் மேல் பாய்ந்தான்….

டேய்… டேய்… அவனே இப்போதாண்டா வந்திருக்கான்… நீ வேற ஏண்டா இப்படி பண்ணுற?...

டேய்…. போடா லூசு துணா… உனக்கென்னடா வந்துச்சு… நான் அப்படிதான் செய்வேன்…. என்னை யாரும் எதும் சொல்ல முடியாது… ஏன் யுவிக்கே அந்த அதிகாரம் கிடையாது… அப்படித்தான யுவி??.. என்று விழியன் கேட்க…

யுவியும் ஆம் என்று தலையசைத்தான்…

ஏண்டா இத்தனை நாள் இங்கே வரலை?... எத்தனை நாள் சொல்லியிருப்பேன்… சீக்கிரம் வாடான்னு… வந்தியாடா நீ?... பேசாதே நீ எங்கிட்ட… என்று யுவியை செல்லமாக நாலு அடி அடித்தும்விட்டு, பின்னர் கோபமும் கொண்டான் விழியன்…

யுவிக்கு விழியனின் பாசமும் அவனது கோபமும் புரிய, அவனருகில் சென்று, இனி போகமாட்டேன்டா… ப்ராமிஸ்… இனி இங்க தான் இருப்பேன்… அப்படியே போறதா இருந்தாலும் உன்னையும் கூட்டிட்டு தான் போவேன்… ஒகேயா?... என்று கைநீட்டி கேட்க…

விழியன் சிரித்துக்கொண்டே யுவியின் வலது மோதிரவிரலை தன் மோதிரவிரலால் தொட்டு இழுத்து சண்டை போட்டு பின் அவனின் கையைப் பிடித்துக்கொண்டான்…

டேய்… டேய்… நான்… என்னை விட்டுட்டீங்களே… என்று துணா பாவமாக சொல்ல, நீயும் வாடா துணா…. என்று விழியன் சொல்ல,

யுவி நீட்டிய இடதுவிரலின் மோதிரவிரலை தன் மோதிரவிரலால் தொட்டு இழுத்து சண்டை போட்டு பின் யுவியின் கையைப் பிடித்துக்கொண்டான் துணாவும்…

துணாவும், விழியனும் மகிழ்ச்சியோடு இருக்க, யுவியின் இதழ்கள் அந்த சந்தோஷத்தில் சற்றே பங்கெடுத்துக்கொண்டது அளவாய்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.