“வெரிகுட். நீ ரொம்ப படிக்கலைன்னாலும் புத்திசாலியாதான் இருக்கிறாய்.” மனதார பாராட்டினாள்.
“அவன் உன்னை விரும்பலைன்னாலும் பரவாயில்லை. கல்யாணத்திற்கு பிறகு உன்னைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை சீராக இருக்கும். ஆனால் அவன் வேறொரு பெண்ணையல்லவா விரும்பறான்.”
சந்தியா கூறவும் உமா திகைத்து நின்றாள்.
“என்ன சொல்றீங்க? வேறொரு பொண்ணை காதலிக்கிறாரா? அப்புறம் ஏன் என்னை மணமுடிக்க நினைக்கிறீர்கள்?”
“அதனால்தான் உன்னிடம் பேச வந்திருக்கிறேன். நீ என் வீட்டிற்கு மருமகளாய் வருவதற்கு முன் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகும் உனக்கு இஷ்டமிருந்தால் சம்மதம் சொல்லு. இல்லையென்றால் நான் அப்பாவிடம் சொல்லிக்கொள்கிறேன். உன் மீது தவறேதும் வராது. எல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்கிறே? இதைப்பார்.”
ஒரு தாளை கோபமுடன் அவன் முகத்தில் வீசினாள்.
“அன்பே ஆருயிரே…” என்ற ரீதியில் வளர்ந்திருந்தது கடிதம். படித்தவுடன் நிமிர்ந்த சிவனேஷ்வர் குழம்பினான்.
“இதை எதுக்கு என்கிட்ட காண்பிக்கிறே?”
“இதை நீயே எழுதிட்டு இப்படி கேட்க உனக்கு வெட்கமாயில்லையா?”