“ஏய்! என்ன சொல்றே? இதை நான் எழுதலை.”
“நீ எழுதலையா? சும்மா நிறுத்து. சும்மா ஃப்ரெண்ட்லியா பழகின என்கிட்ட இப்படி லெட்டர் கொடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது? என் மனசு என்ன பாடு படுதுன்னு தெரியுமா? இதைப்பார் நான் மத்த பொண்ணுங்க மாதிரியில்லை. நான் யாரைப் பார்த்தும் மயங்க மாட்டேன். என்னை யாராலேயும் மயக்க முடியாது. நான் கொஞ்சம் மாடர்ன் பொண்ணுதான். ஆனால் என் அம்மா அப்பா பேச்சை மீற மாட்டேன். அவங்க யாரை கை காட்டறாங்களோ அவங்களைதான் கல்யாணம் செய்துப்பேன். நீ நினைக்கிறது கனவுல கூட நடக்காது.” அவள் கத்தலில் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர ஆரம்பித்தது.
“ப்ளீஸ் மோகனா. கத்தாதே. இந்த லெட்டரை எழுதியது யாரென்று கண்டுபிடிப்போம்.” பொறுமையாய் கூறினான்.
“செய்யறதையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்கலங்கியவாறு அவளை அணைத்துக்கொண்டாள்.
“என் அப்பா சொன்னது சரிதான் அண்ணி. அவர் உன்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கார். உண்மை தெரிஞ்சாலும் உமா தன் முடிவில் இருந்து மாற மாட்டாள்னு சொன்னார். இருந்தும் நான் அவர்கிட்ட சண்டை போட்டுட்டு வந்துட்டேன்.”
“எதற்குச் சண்டை?”
“சொல்றேன்.”