" பசிக்கிறது டா " என்றாள் .. அவனும் சாப்பிடவில்லை என்று அவளுக்கு தெரியும் ..அதனால்தான் பசிக்கிறது என்று கூறவும் இருவரும் சேர்ந்தே உணவு உண்ண சென்றனர் ..
" ஒரு ப்ளேட் போதும் .. எனக்கு நீ ஊட்டி விடேன் " என்று செல்லம் கொஞ்ச
" அய்யே ,போடி ..எனக்கு பசிக்கிது " என்றபடி இருவருக்குமே உணவை பரிமாறினான் அருள் ..
" அதான் இவ்ளோ பசி இருக்கு தானே ? அப்பறம் ஏன் டா உனக்கு இவ்வளவு கோவம் ?" என்று கேட்டாள் அவள் சாப்பிட்டு கொண்டே ..
" நான் என்றாவது , தேவை இல்லாமல் இவ்வளவு கோபபட்டு நீ பார்த்து இருக்கியா சத்யா ?" என்றவன் கேட்கவும் , இடதும் வலதும் தலை ஆட்டினாள் அவள் ..
" தெரியுது இல்லையா ? அப்போ ஏன் எனக்கு இவ்வளவு கோபம் வந்திருக்கும்ன்னு யோசிச்சு பார் " என்றான் .. உடனே அவள்
" நான் என்றாவது , நீ வற்புறுத்தியும் உன் பேச்சை கேட்காமல் இருந்து பார்த்து இருக்கியா அருள் ? என்று கேட்டு அவனையும் வலது இடது என தலையாட்ட வைத்தாள் ..
" தெரியுது இல்லையா ? அப்போ ஏன் நான் வேணாம்னு சொன்னேன்னு நீயும் யோசிச்சு பார் " என்று பதிலடி தந்தாள் ..
" வாயாடி ..வாயாடி .. " என்று அவன் சிரிக்க அவனுடன் இணைந்து சிரித்தாள் சத்யா .. சில நிமிடங்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டே சாப்பிட்டு முடித்தனர் ..
" அருள் வா மாடி ஊஞ்சலில் கொஞ்ச நேரம் ஆடலாம் " என்று சத்யா அழைக்கவும் , அவளுக்கு முன்னதாகவே இரண்டிரண்டு அடிகளாய் எட்டு வைத்து ஓடினான் அவன் .. " டேய் கேடி , நில்லு " என்று அவனை துரத்தி கொண்டு படியேறி இருவரும் ஒரே நேரத்தில் ஊஞ்சலில் அமர்ந்து ஹை 5 கொடுத்து கொண்டனர் ..
" அருள் "
" சத்யா "
" வானதி விஷயத்துல நீ என்ன முடிவு எடுத்து இருக்க ?"
" புரியல " என்று கேள்வியாய் பார்த்தவை முறைத்தாள் சாஹித்யா ..
" டேய் குரங்கு , அவ உன்னை லவ் பண்ணுறா ? அது உனக்கு தெரியுமா ?"
" அதென்ன அவ மட்டும் ? நானும் தாண்டி அவளை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் " என்றான் அவன் காதலாய்
" இதுக்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்லை .. லவ் பண்ணுற சரி .. அதுக்காக நீ அவளுக்குன்னு என்ன செஞ்ச ?"
" எதையும் கொடுத்தா தான் காதலா சத்யா ? அப்படின்னா சந்தோஷ்க்கு நீ என்னத்தை கொடுத்த ? "
" நான் எதையும் கொடுக்கல .. அதே நேரம் நான் அவனுக்கு வலியும் கொடுக்கல "
" அப்போ நான் வானதிக்கு வலியை தரேன்னு சொல்லுறியா "
" உன்கிட்ட நான் அதிகம் பொய் பேசினது இல்லை .. உன் கிட்ட எனக்கு எந்த பயமும் இல்லை .. இதை நான் ஏன் சொல்றேன்னா , நான் சொல்ல போகிற காரணத்தை நீ முழுசா நம்பனும் .. முதல்ல , என் முடிவுக்கும் சந்தோஷ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை .. அதை நீ நம்பனும் .. நாங்க காதலிக்க ஆரம்பிச்சு , இப்போ வரை நான் முடிவெடுத்த பிறகுதான் அவன்கிட்ட சொல்லி இருக்கேனே தவிர , அவனை முடிவெடுக்க விட்டது இல்லை .. " என்றாள் சத்யா தெளிவாய் ..
" ம்ம்ம்ம் சொல்லு " என்று அவளை ஊக்கினான் அவன் ..
" வானதியை விட்டுட்டு இங்க படிக்கணும்னு உனக்கு எப்படி அருள் மனசு வந்தது ? சந்தோஷ்க்கு நான் இல்லைன்னாலும் அவன் தனியாள் இல்லை .. சுபாஷ் மாமா , சைந்து அக்கா அத்தை மாமான்னு எல்லாரும் இருக்காங்க .. ரெண்டு வருஷம் என்பது சந்தோஷுக்கு பெருசு இல்லை .. ஆனா வானதியை நினைச்சு பார்த்தியா ? அவளுக்கு எல்லாமே நீதான்னு உனக்கு தோணலையா டா ? "
" எனக்கு தெரியும் டீ .. அவ என் உயிர் .. அப்படி அவளை தனியா விட்ருவேன் நினைச்சியா ? வானதி என்னை புரிஞ்சுகிட்ட அளவு கூடவா சது உனக்கு புரியல ?"
" சும்மா தாம் தூம்னு குதிக்காத அருள் .. அவ உன்னை புரிஞ்சிகறது இருக்கட்டும் .. முதலில் நீ அவளை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு .. வானதி , பொறுப்பான பொண்ணு ..அதுவும் உன் விஷயத்துல, நீ என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு பின்னாடி நிற்கிற ஆள் .. அவ உன்னை எந்த சூழ்நிலையிலும் புரிஞ்சுப்பா .. ஆனா அதுக்காக நீ புரியாத புதிராய் இருக்கணும்னு அவசியம் இல்லை .. !
அவளுக்கு தெளிவான சிந்தனையும் , எதையும் சுயமாய் சமாளிக்க முடியுற திறனும் இருந்தா , அது அவளுடைய தனி திறமை அல்லது குணம் .. அதுக்காக நீ உன்னை மாத்திக்கணும் , அல்லது அதை பயன்படுத்திக்கனும்னு அவசியம் இல்லை .. ஒரு சராசாரு பொண்ணு காதலில் எதிர்பார்குற , ஊடல் கூடல் , முக்கியாம நேரமும் அரவணைப்பும் நீ அவளுக்கு கொடுத்துதானே ஆகணும் ? ஒருவேளை சந்தோஷ் என்னை தனியா விட்டுட்டு எங்கயாச்சும் போயிட்டா நானும் சோகமாய் இருந்தா , உன்னால பொறுத்துக்க முடியுமா ? "
"... "
" படிப்பு தானே அருள் ? அது எங்க இருந்தாலும் படிக்கலாம் .. ஆனா அவ மனசில் தனிமை உணர்வு வந்திச்சுன்னா , உன்னால அதை போக்கிட முடியுமா ? வானதி அவளது வீட்டில் இருந்திருந்தா , நான் உனக்கிதை சொல்ல மாட்டேன் .. அப்பறம் இன்னொரு விஷயம் " என்றவள் அன்னைக்கு போனில் நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள் ..
" மொத்ததுல , நீ ஒரு நல்ல நண்பனாய் இருக்கணும் என்ற கடமை உணர்வில் , நல்ல காதலனாய் இருக்க மாட்டுற ! எவ்வளவு நாள் தான் உன் நண்பன் என்ற முகத்தையே உலகம் பார்க்குறது ? எங்களுக்காக கொஞ்சம் ரொமாண்டிக் ஹீரோவா மாறுங்க சார் " என்றாள் சாஹித்யா . பெரிதாய் புன்னகைத்தான் அருள் .. அந்த புன்னகையின் பின்னால் நிறைய சிந்தனை இருந்தது .. தனக்காக யோசிக்கும் சத்யா , வானதியின் காதல் மனம் , அவனது சிறு செயலின் பின்னாடி இருக்கும் விளைவுகள் , கூடவே சந்தோஷ் ! சந்தோஷ் இந்த பேச்சில் வரவே இல்லை என்ற பட்ச்சத்தில் , அவன் மிக உறுதியாய் சாஹித்யாவின் விஷயத்தில் ஏன் அப்படி கூறினான் ? தேவை இல்லாமல் அதிகம் சிந்திக்கிறோமோ ? என்றும் கூட யோசித்தான் .. எப்படியோசில நிமிடங்கள் பிரிந்த நண்பர்கள் இணைந்த விட்டனர் .. அடுத்த அத்யாயத்தில் எல்லாரும் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம் ப்ரண்ட்ஸ் ...
தவம் தொடரும்
{kunena_discuss:838}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.