01. நீங்களும் துப்பறியலாம் - தேன்மொழி
ஹாய் மக்களே! இது ஒரு திடீர் மினி-துப்பறியும் தொடர்!
தினமும் வெளியாகும் ஒவ்வொரு சின்னஞ்சிறு கதையிலும் இன்ஸ்பெக்டர் குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தார் என்று நீங்கள் தான் துப்பறிந்து சொல்ல வேண்டும்.
சரியாக சொல்பவர்களுக்கு கை தட்டல் உண்டு.
கதை வெளியான மறுநாள் பதிலை நான் பதிவு செய்வேன்.
என்ன துப்பறிய நீங்க தயாரா??? வாங்க வாங்க...
மாட்டிக் கொண்ட திருடன்
இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் எனும் தேன் எதிரில் இருந்தவரை கூர்மையாக பார்த்தான்.
“பணத்தை எல்லாம் திருடிட்டு போயிட்டான் சார்.... அஞ்சு லட்சம் ரூபாய்...” என புலம்பினார் கண்ணன்.
“என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க மிஸ்டர் கண்ணன்...”
“இது கோபால், இங்கே எனக்கு டிரைவரா மட்டுமில்லாமல் வலது கை மாதிரி எல்லாம் செய்றவன். இவனுக்கு தான் முழுசா எல்லாம் தெரியும்...” என்ற கண்ணன், அருகே நின்றிருந்த உயரமான மனிதனை பார்த்து,
“சார் கிட்ட நடந்ததை அப்படியே சொல்லு கோபால்...” என்றார்.
You might also like - Vasantha bairavi... A neat family story...
தேனின் பார்வை கோபாலிடம் சென்றது.
“கண்ணன் சார் கொடுத்த பணத்தை பாங்க்ல கட்ட ஒரு பேக்ல எடுத்துட்டு போனேன் இன்ஸ்பெக்டர் சார்... காரை பார்க் பண்ணிட்டு இறங்கினப்போ, திடீர்னு ஒருத்தன் என் முதுகுல துப்பாக்கியை வச்சு, கைல இருக்க பணத்தையும், கார் சாவியையும் கொடுன்னு மிரட்டி என் கிட்ட இருந்து பிடுங்கிட்டு, என்னை காருக்குள்ள தள்ளி, பூட்டிட்டு ஓடிட்டான்... அக்கம் பக்கம் கூட்டம் இருந்தாலும் காருக்குள்ளே இருந்து நான் போட்ட சத்தம் யாருக்கும் கேட்கலை... ஒரு வழியா நான் காருக்குள்ளே இருந்து வெளியே வந்தப்போ அவன் ஓடி போய் பல மணி நேரம் ஆகிடுச்சு... அந்த பணத்தை இனிமேல் கண்ணால பார்க்க முடியுமான்னு தெரியலை சார்...”
“தெரியாமல் என்ன? உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கனுமே... பணத்தை எங்கே வச்சிருக்க உண்மையை சொல்லு...”
இன்ஸ்பெக்டர் தேன் உடனே குற்றவாளியை கண்டுபிடிச்சிட்டார்... எப்படி கண்டுபிடிச்சார்ன்னு உங்களுக்கு தெரியுமா???
தெரிஞ்சா சொல்லுங்க...
[பதில் தெரிஞ்சுக்க இந்த லின்க்கை க்ளிக் செய்ங்க http://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/5382-neengalum-thupariyalam-01#comment-40698 ]